Union Budget 2025: இன்னும் சில நேரத்தில் நாடாளுமன்றத்தில் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வரி அடுக்குகள், வரி விலக்குகள், வரி வரம்பில் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி 3.0 ஆட்சியின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது முழு அளவிலான பட்ஜெட்டில், தனிநபர் வரிவிதிப்பு முறையை மாற்றியமைக்கக்கூடிய மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் மற்றும் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள் மேற்படுத்தப்படும் என வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
வரி அடுக்கு தொடர்பான மாற்றங்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் வரிச் சுமைகளுடன், அரசாங்கம் வரி அழுத்தத்தைக் குறைத்து நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு சாதகமான வரி அடுக்கு தொடர்பான மாற்றங்கள் இருக்கும் என வரி செலுத்துவோர் நம்புகிறார்கள்.
அதிகபட்ச வரி அடுக்கில் சாத்தியமான மாற்றங்கள்
2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் மற்றும் சம்பளம் பெறும் வர்க்கத்தினர் வருமான வரி கட்டமைப்பில், குறிப்பாக அதிகபட்ச 30% வரி அடுக்கில் சாத்தியமான மாற்றங்கள் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். தற்போது ஆண்டுதோறும் ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களுக்குப் பொருந்தும், இந்த அடுக்கு வரி செலுத்துவோர் மத்தியில் விவாதப் பொருளாக உள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கம் 30% வரி விகிதத்தை நீக்குமா அல்லது குறைக்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
பழைய வரி முறையின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு
பழைய வரி முறையின் (Old Tax Regime) கீழ் அடிப்படை விலக்கு வரம்பை அதிகரிக்க வரி செலுத்துவோர் கோருகின்றனர், இது 2014-15 நிதியாண்டிலிருந்து ரூ.2.5 லட்சமாகவே உள்ளது. இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவது நடுத்தர வர்க்கத்தினருக்கு கணிசமான நிவாரணத்தை அளிக்கும் என்றும், அவர்களுக்கு அதிக செலவழிக்கக்கூடிய வருமானத்தை வழங்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இந்த நடவடிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில் உயரும் வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிக்க உதவும்.
புதிய வரி முறையின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு
நிலையான விலக்கின் வரம்பு (Standard Deduction) புதிய வரி முறையில் (New Tax Regime) தற்போதைய ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பு ரூ.75,000 ஆக உள்ளது. இது ரூ.1 லட்சமாக அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பட்ஜெட்டில், நிலையான விலக்குக்கான வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ