Income Tax Act: பண பரிவர்த்தனை விதிகள்... வரம்பை மீறினால் 100% அபராதம்

மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2025, 04:45 PM IST
  • வரம்பை மீறும் பண பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
  • பண பரிவர்த்தனைகளுக்கான விதிகள்.
  • விதிகளை அறிந்திருப்பதன் மூலம் தவறுகளை தவிர்க்க முடியும்.
Income Tax Act: பண பரிவர்த்தனை விதிகள்... வரம்பை மீறினால் 100% அபராதம் title=

மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல சமயங்களில் மக்கள் அறியாமலேயே வரம்பை மீறி பணப் பரிவர்த்தனைகளைச் செய்து பின்னர் அதிக அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, விதிகளை அறிந்திருப்பதன் மூலம் தவறுகளை தவிர்க்க முடியும்.

வரம்பை மீறும் பண பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?

வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ், பணப் பரிவர்த்தனைகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரம்புக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் ரொக்கமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிடிபட்டால், ரொக்கமாக செலுத்திய தொகைக்கு இணையான அபராதத்தை வருமான வரித்துறை விதிக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்தது.

பண பரிவர்த்தனைகளுக்கான வரி விதிகள் 

ஜனவரி 2, 2025 அன்று வெளியிடப்பட்ட சிற்றேட்டில், "பணப் பரிவர்த்தனைகளுக்கு "இல்லை" என்று சொல்லுங்கள்" என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. பண பரிவர்த்தனைகள் தொடர்பான பல தகவல்கள் சிற்றேட்டில் பகிரப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனையின் வரம்பு, பரிவர்த்தனையின் தன்மை மற்றும் அதை யார் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி இது கூறுகிறது.

சிற்றேட்டில், வருமான வரித் துறையால் பணம் தொடர்பான என்ன விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை விபரமாக அறிந்து கொள்ளலாம்:

1. பிரிவு 269SS: கடன்கள், வைப்புத்தொகைகள் மற்றும் குறிப்பிட்ட தொகைகளை ரொக்கமாக பெற்றுக்கொள்வது/ஏற்றுக்கொள்வது

தொகை (அல்லது மொத்த தொகை) ரூ. 20,000 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், கடன் அல்லது வைப்புத்தொகை அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட தொகையை எந்தவொரு நபரும் ரொக்கமாக ஏற்கக்கூடாது. குறிப்பிட்ட தொகை என்பது அசையாச் சொத்தை மாற்றுவது தொடர்பாக முன்பணம் அல்லது ஏதேனும் தொகையை எடுத்துக்கொள்வதாகும். 

ரொக்க பரிவர்த்தனை விதி கீழ்கண்டவற்றுக்கு பொருந்தாது:

1. அரசாங்க வங்கி நிறுவனம், தபால் அலுவலக சேமிப்பு வங்கி அல்லது கூட்டுறவு வங்கி.

2. மத்திய, மாநில அல்லது மாகாண சட்டத்தால் நிறுவப்பட்ட நிறுவனம்.

3. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2(45) க்குள் வரும் அரசு நிறுவனம்

4. அறிவிக்கப்பட்ட நிறுவனம், சங்கம் அல்லது அமைப்பு (அல்லது நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அமைப்புகளின் வகுப்பு).

5. ரொக்கம் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும் விவசாய வருமானம் ஈட்டினாலும், அவர்கள் இருவரின் வருமானமும் வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் வரி விதிக்கப்படாவிட்டாலும், மேற்கண்ட உத்தரவு பொருந்தாது.

விதியை மீறினால் விதிக்கப்படும் அபராதம்

மேற்கண்ட விதியை மீறினால், வருமான வரிச் சட்டத்தின் 271டி பிரிவின் கீழ், ரொக்கமாக எடுக்கப்பட்ட அதே தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | குழந்தைகள் மூலம் பெற்றோர் வருமான வரி சேமிப்பு பெறலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்

2. பிரிவு 269 ST: தொகையை பணமாக பெறுதல்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST இன் கீழ், ஒரு நபர் ஒரு நாளில் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைப் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த நபர் வரி செலுத்துபவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த விதி அனைவருக்கும் பொருந்தும்.

இந்த விதியின் கீழ், பின்வரும் சூழ்நிலைகளில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெறக் கூடாது:

1. ஒரு நாளில் ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் மொத்தத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற முடியாது.

2. திருமணம், பிறந்த நாள் போன்ற எந்த ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சிக்காக ஒருவரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாகப் பெற முடியாது.

இந்த விதி யாருக்கு பொருந்தும்?

கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளால் வசூலிக்கப்படும் கட்டணம், ஆன்மீக நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் தொடர்புடைய இரு நபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் அல்லது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும் வரியிலிருந்து விலக்கு பெற்றவர்கள்.

இந்த விதி யாருக்கெல்லாம் பொருந்தாது?

அரசு அல்லது ஏதேனும் வங்கி நிறுவனம், தபால் அலுவலக சேமிப்பு வங்கி அல்லது ஏதேனும் கூட்டுறவு வங்கி.

விதியை மீறினால் விதிக்கப்படும் அபராதம்

“மேற்கண்ட உத்தரவை மீறி யாரேனும் பணம் எடுத்தால், 271டிஏ பிரிவின் கீழ் ரொக்கமாக எடுத்த தொகைக்கு இணையான அபராதம் விதிக்கப்படும்” என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

3. பிரிவு 269T: கடன் அல்லது வைப்புத் தொகையைத் திருப்பிச் செலுத்துதல்

எந்தவொரு நபரும் 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பணமாக செலுத்த முடியாது. அரசு, வங்கிகள், தபால் நிலைய சேமிப்பு வங்கிகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விதியை மீறினால் விதிக்கப்படும் அபராதம்

பிரிவு 271E இன் கீழ், பணமாக செலுத்தப்பட்ட அதே தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.

4. பிரிவு 269SU: மின்னணு முறையில் பணம் செலுத்துதல்

ஆண்டு விற்றுமுதல் ரூ.50 கோடிக்கு மேல் உள்ளவர்கள், நிர்ணயிக்கப்பட்ட மின்னணு முறைகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்க வேண்டும்.

விதியை மீறினால் விதிக்கப்படும் அபராதம்

விதியை மீறினால், 271DB பிரிவின் கீழ், நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.

பண பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு விரும்புகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட மக்கள் பணமாக பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் முயற்சியாக உள்ளது.

மேலும் படிக்க | Income Tax Calculator: ரூ.15 லட்சம் வருட வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரி முறை சிறந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News