தபால் நிலையத்தின் தூள் திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!!

Post Office Time Deposit Scheme: மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கமும் பலவித சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அவற்றில் தபால் நிலையம் மூலம் நடத்தப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2024, 03:29 PM IST
  • இதில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?
  • இதற்கான கால அளவு என்ன?
  • வட்டியிலேயே இரண்டு லட்சம் வருமானம்.
தபால் நிலையத்தின் தூள் திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!! title=

Post Office Time Deposit Scheme: இந்தியாவில் சேமிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. குறிப்பாக நடுத்தர மக்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சேமிக்கும் பழக்கம் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு பழக்கமாக இருக்கின்றது. இதன் மூலம் முதுமை மற்றும் எதிர்பாராத தருணங்களில் நமக்கு பணத்தேவை ஏற்படும் பொழுது நிதி நெருக்கடி ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம். 

மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கமும் பலவித சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அவற்றில் தபால் நிலையம் (Post Office) மூலம் நடத்தப்படும் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இவை பாதுகாப்பான முறையில் நல்ல வருமானத்தை அளிக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் பல விதமான திட்டங்கள் அஞ்சல அலுவலகம் மூலம் நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட ஜாக்பாட் திட்டங்களில் ஒரு திட்டத்தின் மூலம், வட்டியில் மட்டும் லட்சக்கணக்கான வருமானத்தை ஈட்ட முடியும். அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டம் தான் அது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருப்பதோடு வலுவான வருமானமும் கிடைக்கும். இதன் காரணமாக இந்த திட்டம் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக இருக்கின்றது.

Post Office Time Deposit Scheme: இதில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?

முதலீட்டாளர்கள் அனைவருமே பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற விரும்புகிறார்கள். இந்த இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கின்றன. தபால் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டி, சந்தை விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது லாபகரமான வட்டியாக கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 1, 2023 அன்று போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் ஐந்து ஆண்டு கால திட்டத்திற்கான வட்டி விகிதம் (Interest Rate) 7 சதவீதத்திலிருந்து 7.5% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு பின்னர் சந்தையில் கிடைக்கும் சிறுசேமிப்பு திட்டங்களில் இது ஒரு பிரபலமான மற்றும் லாபகரமான திட்டமாக மாறியுள்ளது. இதில் கிடைக்கும் உத்திரவாதமான வருமானம் காரணமாக இத முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post Office Time Deposit Scheme: இதற்கான கால அளவு என்ன?

தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டத்தில் பல்வேறு கால அளவுகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் நாம் நமது தொகையை 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான கால அளவுகளில் முதலீடு செய்யலாம்.

- 1 ஆண்டு முதலீட்டிற்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கின்றது.

- 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7 சதவீத வட்டி கிடைக்கின்றது.

- 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.5 சதவிகித வட்டி கிடைக்கின்றது.

- இரட்டிப்பு வருமானத்தை பெற வேண்டுமானால் இதைவிட அதிக காலத்திற்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | வீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாது

வட்டியிலேயே இரண்டு லட்சம் வருமானம்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து எப்படி லட்சங்களில் வருமானம் பெறுவது? அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 7.5 சதவிகித வட்டி கிடைக்கும். இந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி தொகையாக மட்டும் அவருக்கு 2,24,974 ரூபாய் கிடைக்கும். இதனுடன் அவர் முதலீடு செய்த தொகையையும் கூட்டினால் மெச்சூரிட்டிக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை 7,24,974 ரூபாயாக இருக்கும். இந்த வழியில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்.

வரி விலக்கு

தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில், வருமான வரி சட்டம் 1961 -இன் பிரிவு 80C இன் கீழ் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு (Tax Exemption) அளிக்கப்படுகின்றது. இந்த சேமிப்பு திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகள் திறக்கப்படுகின்றன. ஒன்று ஒற்றைக் கணக்கு (Single Account), மற்றொன்று கூட்டுக் கணக்கு (Joint Account). 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்க முடியும். வருடாந்திர அடிப்படையில் இந்த கணக்கில் வட்டித்தொகை சேர்க்கப்படும்.

மேலும் படிக்க | Budget 2024: முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்... வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News