Government Employees Latest News: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு அவர்களது ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகின்றது. இது வயதாகும் போது அவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது. இது குறித்து ஒரு சமீபத்திய புதுப்பிப்பு வந்துள்ளது.
State Government Employees: மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி
கம்யூடட் பென்ஷன் அதாவது ஓய்வூதிய மறுசீரமைப்பு மற்றும் வயதுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை அதிகரிப்பது தொடர்பாக உத்தரபிரதேசத்தில் சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஓய்வூதியதாரர் அமைப்புகளின் தொடர்ச்சியான கோரிக்கைள் உள்ள போதிலும், மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மாநில அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
Pensioners: ஓய்வூதியதாரர்கள் ஆலோசனைக் குழு கூட்டம்
சமீபத்தில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் தலைமையில் ஓய்வூதியதாரர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது, இதில் இந்த விஷயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
Commuted Pension: மாநில அரசின் நிலைப்பாடு என்ன?
இந்த கூட்டத்தின் போது, ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலத்தை 12 ஆண்டுகளாக நீட்டிக்கும் திட்டம் குறித்த முடிவு மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி அல்லது நீதிமன்றத்தின் உத்தரவின்படி எடுக்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். ஆனால் இதில் இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
Pension Hike: ஓய்வூதிய உயர்வு மற்றும் பிற சிக்கல்கள்
தற்போது 80 வயதுக்கு பிறகு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 65, 70 மற்றும் 75 வயதை பூர்த்தி செய்யும் மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு முறையே 5%, 10% மற்றும் 15% அதிகரிப்பு வழங்கும் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தவிர, கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை (DA Arrears) வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று நிதித்துறை தெளிவுபடுத்தியது.
ஓய்வூதியர்களின் முக்கிய கோரிக்கைகள்
உத்தரபிரதேச ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓம்கார் நாத் திவாரி கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:
- Notional Increment: நோஷனல் சம்பள உயர்வின் பலன்
நோஷனல் சம்பள உயர்வின் அடிப்படையில் விடுமுறை அலவன்சுகளை அளிக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் கோருகின்றனர்.
- Dearness Relief: அகவிலை நிவாரணம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டிஏ அரியர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
- Commuted Pension: ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு
தற்போது 15 ஆண்டுகளாக உள்ள ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்புக் காலத்தை 12 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறுமா?
ஓய்வூதியம் தொடர்பான இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்த முடிவு மாநில அரசின் கையில் இல்லை என்பதை மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்தது. இது குறித்து அரசாங்கம் விரைவில் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஓய்வூதியதாரர்கள் நம்புகிறார்கள்.
ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலம் தொடர்பான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் இதில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தை சார்ந்து இருக்கின்றது. மத்திய அரசு இதில் என்ன முடிவு எடுக்கும்? ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? இந்த பதிலுக்காக ஓய்வூதியதாரர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா 2025... வரிசெலுத்துவோர் அடையும் சில பயன்கள் விபரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ