மேடையில் பாடுகையில் பாடகிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கர்ப்பிணி என்று கூட பாராமல் மேடையில் பாடிகொண்டிருந்த பாடகியை சுட்டுக் கொள்ளப்பட்டார். 

Last Updated : Apr 12, 2018, 02:49 PM IST
மேடையில் பாடுகையில் பாடகிக்கு ஏற்பட்ட பரிதாபம்!  title=

பாகிஸ்தானில் பெண் பாடகி ஒருவரை மர்மநபர் ஒருவர் அவர் கர்ப்பிணி என்று கூட பாராமல் மேடையிலேயே சுட்டுக் கொள்ள பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கங்கா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சமீனா சாமன் (வயது-22) என்ற பாடகி மேடையில் அமர்ந்தவாறு பாடிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பாடகியின் அருகில் சென்ற ரசிகர்கள் அவரின் மீது பணத்தை இறைத்தனர். பின்னர் அந்த பாடகி மேடையில் எழுந்து நின்று பாட துவங்கினார். இதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆடு என அந்த நபர் கூற, பாடகி தான் கர்பமாக இருப்பதை காரணம் காட்டி மறுத்துள்ளார். அதற்கு கோபமான ரசிகர்கள்துப்பாக்கியால் பாடகியை சரமாரியாக சுட்டனர். 

படுகாயத்துடன் கீழே விழுந்த பாடகியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் இவர் முன்னரே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Trending News