அனைத்திற்கும் அருமருந்து, முள் சீத்தாப்பழம்..!

கேன்சர் நோய்க்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதை விட முள் சீத்தாப்பழத்தை சாப்பிடுவது கூடுதல் பலனை தரும் என ஆய்வுகள் கூறுகின்றன. 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 20, 2022, 05:18 PM IST
  • 12 வகையான புற்று நோய்கள்
  • அருமருந்தாகும் முள் சீத்தாப்பழம்
  • ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்
அனைத்திற்கும் அருமருந்து, முள் சீத்தாப்பழம்..! title=

இந்தியாவில் புற்றுநோய்

இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து அதன் அறிக்கையையும் வெளியிட்டது. அதன் படி 2025ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் பதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சதவீதம் 13.9 லட்சத்திலிருந்து 15.7 லட்சமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புற்றுநோய் வரக்காரணம் 

உலகம் முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்று புற்றுநோயால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம் புகையிலை பொருட்களின் பயன்பாட்டால்தான் என உறுதிபடுத்தப்பட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், அதனை தொடர்ந்து மது அருந்துதல், அதீத உடல் எடை, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, முக்கியமாக காய் கறி மற்றும் பழ வகைகளைத் தவிப்பது, உடலுக்கு முறையான வேலை கொடுக்காமல் இருப்பவையும் அடங்கும். 

மேலும் படிக்க | Neem vs Cancer: புற்றுநோயையும் போக்கும் வேப்பிலை! அதிசயத்தில் விஞ்ஞானிகள்

புற்றுநோயுக்கான அறிகுறிகள் 

தொடர்ந்து வறண்ட இருமல், இருமலின்போது ரத்தம் கலந்து வருதல், மூச்சுத்திணறல், ஆழ்ந்த சுவாசித்தலில் அடிக்கடி ஏற்படும் வலி, மார்பு வலி போன்றவை. மேலும், தோல், நாக்கு அல்லது வாய் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக குணமடையாத புண், திடீரென குரலில் ஏற்படும் மாற்றம், வாயில் துர்நாற்றம் வீசுதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகவே கண்டறியப்பட்டுள்ளன. 

புற்றுநோய்க்கான தீர்வு 

தீராத புற்று நோய்க்கு உயிரிழப்புதான் கடைசி தீர்வா என நீங்கள் கேட்கலாம். ஆனால், ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை முற்றிலுமாக தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆங்கில மருந்துகள் ஆயிரம் இருந்தாலும் நமது உணவில் குறிப்பிட்ட சிலவற்றை உட்கொண்டால் புற்றுநோயில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

முள் சீத்தாப் பழம்

பச்சை நிறத்தில் குட்டி பலாப்பழம் இருந்தால் எப்படி இருக்கும் அந்த வடிவத்தில் இருக்கும் முள் சீத்தாப் பழம் புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு சுவையில் இருக்கும். இந்த முள் சீத்தாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக, மினரல்கள், புரதம், ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், கால்சியம், வைட்டமின் ஈ, வைட்டமின்கள் உள்ளன B,பொட்டாசியம், இரும்பு சத்து ஆகிய மூலப்பொருட்கள். இவை நமது உடலை சீராக வைக்க மிகவும் உதவியாக உள்ளது. அது மட்டும் இன்றி இந்த முள் சீத்தாப் பழத்தின் இலைகள், மரப்பட்டை, பழத்தின் விதை, வேர் உள்ளிட்ட அனைத்தும் புற்று நோய்க்கு மருந்தாகவே அமைகிறது.

சித்த மருத்துவத்தில் முள் சீத்தாவை 'கேன்சர் கில்லர்' என்றே அழைக்கிறார்கள். இந்த பழம் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன் புற்று நோய் செல்களை உடலில் வளர விடாமல் தடுக்கிறது. அது மட்டுமின்றி, புற்று நோய் நோயாளிகள் முள் சீத்தா இலைகளை நாள்தோறும் டீ போட்டு குடித்து வந்தால், கீமோதெரபிக்கான அவசியம் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த முள் சீத்தாப் பழம், வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் பன்னிரெண்டு வகையான புற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வெள்ளைபடுதல் நோய்க்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால் போதும்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews  ,   ட்விட்டரில்   @ZeeTamilNews   மற்றும் டெலிகிராமில்   https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை  லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

ஆண்ட்ராய்டு இணைப்பு - https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு - https://apple.co/3loQYeR

Trending News