பாகிஸ்தானில் 100 இந்திய மீனவர்கள் கைது!!

Last Updated : Mar 27, 2017, 10:46 AM IST
பாகிஸ்தானில் 100 இந்திய மீனவர்கள் கைது!! title=

குஜராத்தை சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்ததாக பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள்.

கட்ச் மாவட்டம் ஜாகு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை, தங்கள் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.  

கடந்த மார்ச் மாதம் இந்திய 225 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இதுபோல் இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Trending News