அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு...!

அசாமின் பார்பெட்டா பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 10:18 AM IST
அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு...! title=

அசாமின் பார்பெட்டா பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானது...! 

அஸ்ஸாம் மாநிலத்தின் பார்பெட்டா பகுதியில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானதாக நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை காலை சரியாக 9:17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை. 

 

Trending News