2023 ஜனவரி டூ ஜூன் வரை - இந்தியாவை அதிர வைத்த சம்பவங்கள்... ஓர் பார்வை

Year Ender 2023: நடப்பு 2023ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அதாவது முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 26, 2023, 06:27 PM IST
  • ஒடிசா ரயில் விபத்து பலரின் மனங்களையும் நடுங்கச் செய்தது.
  • மணிப்பூர் வன்முறை இந்தியாவின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்.
  • மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பெற்றது.
2023 ஜனவரி டூ ஜூன் வரை - இந்தியாவை அதிர வைத்த சம்பவங்கள்... ஓர் பார்வை title=

Year Ender 2023, Important Events In India: கொரோனாவுக்கு பிந்தைய இந்த காலகட்டமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமானதாகும். கொரோனா ஏற்படுத்திய பொருளாதார ரீதியிலான தாக்கம், உடல் ரீதியான பாதிப்பு, மன ரீதியான தடைகள் ஆகியவற்றை இப்போதுதான் மக்கள் கொஞ்சம் கொஞ்சம் மறந்து வருகின்றனர் எனலாம். 

நாம் கொரோனாவில் இருந்து மீண்டதற்கான முக்கிய காரணம், கடந்த காலத்தில் செய்த தவறுகளை புரிந்துகொண்டு அதை செய்யாததுதான். தற்போதும் பல இடங்களில் கொரோனா பரவுகிறது ஆனால், இது கட்டுக்குள் வைத்திருக்க இயலும் என வல்லுநர்களால் கூறப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது என்பது அவசியமாகிறது. நடப்பு 2023ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது. எனவே, நடப்பு 2023ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அதாவது முதல் ஆறு மாதங்களில் நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை அதன் கால வரிசையிலேயே இங்கு நினைவுகூரலாம்.

மேலும் படிக்க | 2023இல் மத்திய அரசின் டாப் 5 அறிவிப்புகள்... மக்களவையை மீண்டும் குறிவைக்கும் பிரதமர் மோடி!

ஜனவரி 

2023ஆம் ஆண்டே இந்திய குத்துச்சண்டை சங்கத்தில் எழுந்த திடுக்கிட வைக்கும் பாலியல் குற்றச்சாட்டில் இருந்துதான் தொடங்கியது எனலாம். உலக அரங்கில் இந்தியாவுக்காக பல போட்டிகளில் பதக்கம் வென்று கொடுத்த வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் அநீதிகளுக்காக தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் பதவியில் இருந்து தூக்கப்பட்டாலும், இன்று வரையிலும் இந்த பிரச்னைக்கு வீராங்கனைகள் கேட்ட தீர்வு எட்டப்படவில்லை. 

பிப்ரவரி

டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா எட்டு மணிநேர விசாரணைக்கு பின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதானார். இதன்பின் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு, இன்னும் சிறையில் உள்ளார். அவரை அமைச்சரவையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவித்தார். 

மார்ச் 

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பை வழங்கியது. அதன்மூலம் அவர் மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தீர்ப்பு வெளியான மார்ச் 23ஆம் தேதி முதல் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக வடகிழக்கு மாநில தேர்தலும் இம்மாதத்தில் தொடர்ந்து தலைப்பு செய்திகளாகின. திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மேகாலயா மற்றும் நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வென்றன.

மேலும் படிக்க | 'உரிய ஊதியமில்லை' - சுரங்க விபத்து மீட்புப் பணியில் உதவிய எலி வளை தொழிலாளர்கள் குமுறல்!

ஏப்ரல் 

இந்தியா அதிகாரப்பூர்வமாக உலக மக்கள் தொகையில் எண்ணிக்கையில் சீனாவை தாண்டி, முதல் இடத்தை பிடித்தது. அதாவது. 142.86 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இதில் முதல் இடத்தையும், சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தையும் இந்த பட்டியலில் பிடித்தன. மற்றொரு முக்கிய நிகழ்வாக ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அத்திக் அகமது மற்றும் அவரின் தம்பி அஷ்ரப் ஆகியோர் போலீசார் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மே

இந்த மாதம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. மே 3ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின ஒற்றுமை பேரணியை அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் நடத்தியது. இதை தொடர்ந்து, மெய்ட்டி மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையில் எழுந்த வன்முறை பல மாதங்கள் நீடித்தது. இதுஒருபுறம் இருக்க, டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரமதர் மோடியால் மே 28ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. பழைய நாடாளுமன்றத்தை விட நவீன வசதிகளுடனும், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அமரும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடத்தை பிரதமர் திறந்துவைத்தார். 

ஜூன் 

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஜூன் 2ஆம் தேதி நடந்தது. இதில் 280க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த தண்டாவளத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த ரயிலில் மோதி தடம் புரண்டது. தொடர்ந்து பக்கத்து தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளில் மோதி அதுவும் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பலரையும் உறைய வைத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News