PM மோடி 2 நாள் பயணமாக பூட்டான் விஜயம்; இருதரப்பு பேச்சுவார்த்தை...

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பூட்டானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார், இதில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!

Last Updated : Aug 17, 2019, 09:42 AM IST
PM மோடி 2 நாள் பயணமாக பூட்டான் விஜயம்; இருதரப்பு பேச்சுவார்த்தை... title=

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பூட்டானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார், இதில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பூட்டான் செல்கிறார். தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று குறிப்பிட்டுள்ளர். நம்பகமான நட்புநாடாகவும் அண்டை நாடாகவும் பூட்டான் விளங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளர். தமது பயணம் மூலம் இந்த நட்பும் இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் புறப்பாட்டிற்கு முன்னதாக, பூட்டானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் செய்தி நிறுவனமான ANI-யிடம் கூறுகையில்; ஆகஸ்ட் 17-18 முதல் பூட்டானுக்கு பிரதமர் மோடியின் வருகை இந்தியா-பூட்டான் கூட்டாண்மை வலுப்பெற்றதற்கு தொடர்ச்சியாகக் காணப்படலாம் என்று கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையில் சுமார் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி தனது வருகையின் போது ஐந்து நிகழ்வுகளைத் தொடங்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 17 ஆம் தேதி, பிரதமர் மோடி பரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார், அதைத் தொடர்ந்து அவர் செம்தோகா த்சோங்கிற்கு செல்வார். பிரதமர் மோடியும் அதே நாளில் தாஷிச்சோட்ஸோங்கிற்கு வருகை தரும் போது அவருக்கு மரியாதை அளிக்கப்படும். டொங்கில், பிரதமர் பூட்டானிய மன்னரை அல்லது 'ட்ரூக் கயல்போ', ஜிக்மே கேசர் நம்கீல் வாங்சக்கை சந்திப்பார். பிரதமர் மோடியின் நினைவாக சிப்ட்ரல் ஊர்வலமும் நடைபெறும்.

பிரதமர் மோடி 2வது முறையாகவும், 2வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாகவும் அவர் பூடான் நாட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

 

Trending News