வீலிங் செய்து சீன் போட்ட இளைஞன்... மாணவி மீது மோதி விபத்து - சிசிடிவி வீடியோ வெளியீடு

காவல்துறை ஏழு முறை அபராதம் விதித்தும், மீண்டும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, கல்லூரி மாணவி இடித்து தள்ளிய 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2023, 11:26 PM IST
  • விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.
  • விபத்திற்கு நான்கு நாள்கள் முன்புதான் போலீசாரிடம் இருந்து பைக்கை வாங்கியுள்ளார்.
  • விபத்து பிப். 9ஆம் தேதி நடந்தது.
வீலிங் செய்து சீன் போட்ட இளைஞன்... மாணவி மீது மோதி விபத்து - சிசிடிவி வீடியோ வெளியீடு title=

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள சாலைகள், நீண்ட சாலைகள் என அதிகம் கவனம் பெறும் இடங்களில் தற்போது, விலை உயர்ந்த பைக்குகளை வீல்லிங், ஸ்டாப்பி, ஸ்கிட் உள்ளிட்ட அடிப்படை சாகசம் முதல் பல வித்தைகளை காட்ட இளைஞர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் கிடைக்கும் கவனம், சக வயது பெண்களை ஈர்க்க மேலெழுந்து வரும் ஆர்வம் மிகுதி ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், அதில் கிடைக்கும் திரிலுக்காகவும் இளம் வயதினர் அந்த சாகசங்களை செய்து வருகிறனர். இதில், அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தானது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நம் அண்டை மாநிலமான கேரளாவில் நிகழந்துள்ளது.  

7 முறை அபராதம்

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சார்ந்தவர் நோஃபால். 18 வயது இளைஞரான இவர், அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இதையடுத்து, இவர் மீது கேரள போக்குவரத்து துறை சார்பில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏழு முறை அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு, இவரது பைக் திருவனந்தபுரம் வெஞ்ஞாறு மூடு காவல் நிலையத்தில் இருந்து நோஃபால் கையில் ஒப்படைக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க | இயக்குநருடன் பழனிக்கு வந்த சமந்தா... நிறைவேற்றிய நேற்றிக்கடன் என்ன தெரியுமா?

பைக் கிடைத்த இரண்டு நாட்களில் அதாவது, கடந்த வியாழக்கிழமை (பிப். 9) அன்று கல்லூரி மாணவிகள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் முன்பு சாகசம் காட்டுவதற்காக திடீரென பைக் வீல்லிங்கில் ஈடுபட்டுள்ளார். 

ஓட்டுநர் உரிமம் ரத்து

இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த ஒரு மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காயம் அடைந்த மாணவி, மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. வெளியான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கேரளா போக்குவரத்து துறை அந்த இளைஞரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் கேரளா போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'ஐய்யோ...' பிரபலத்தை பார்த்ததும் கூறிய பிரதமர் - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News