காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!!

மனைவியில் நினைவாக பங்காள ஒன்றை கட்டிய அந்த கணவர்,  அவரது மெழுகு சிலையை வீட்டில் நிறுவியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2020, 12:44 PM IST
  • 2017-ல் நடந்த கார் விபத்தில், அவரது மனைவி இறந்து விட்டார்.
  • கிரகபிரவேச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
  • அவரது உண்னையான காதல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது
காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை  நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!! title=

தனது கனவு இல்லத்தை கட்டிய அந்த நபர், தனது மனைவி கிரபிரவேச நேரத்தில் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

உண்மையான காதலுக்கு ஒரு போதும் மரணமில்லை அதனால், இறந்து போன   தனது மனைவியை மறக்க முடியாத கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர், தனது மனைவி தனது கனவு வீட்டின் கிரகபிரவேசத்தில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவரது மெழுகு சிலையை அந்த வீட்டில்  அமைத்தார். 

 

2017-ல் நடந்த கார் விபத்தில், ஸ்ரீநிவாஸன் அவர்களின் மனைவி  மாதவி இறந்து விட்டார். மகளுடன் காரில் திருப்பதி சென்று கொண்டிருந்த போது,  விபத்து நேரிட்டது. அவரது மனைவி மாதவி  உயிருடன் இருந்தபோது,  பங்களா ஒன்றை கட்ட வேண்டும் என்பது மாதவியின் கனவு. எனவே இந்த வீட்டை தனது மனைவியின் நினைவாக கட்டியுள்ளார்.

கிரகபிரவேச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது இந்த உண்னையான காதல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது

Trending News