அடுத்த பிறவியில் நாம் மனிதனா, மிருகமா.. தீர்மானிப்பது எது..!!

ஒரு மனிதன் அடுத்த பிறவியில் மனிதனாக பிறப்பானா அல்லது மிருகமாக பிறப்பானா என்பதை அவனது செயல்களே தீர்மானிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2022, 07:08 PM IST
  • அடுத்த பிறவியில் என்னவாக இருப்பீர்கள்?
  • தீர்மானிக்கப்படுவது எப்படி என்பதை அறிக
  • கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்.
அடுத்த பிறவியில் நாம் மனிதனா, மிருகமா.. தீர்மானிப்பது எது..!! title=

அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறப்பைப் பற்றி அறிய பெரும்பாலான மக்களுக்கு மிகவும் ஆர்வம் இருக்கும். இதை அறியும் சில வழிகள் தர்ம புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மகாபுராணமான கருடபுராணத்தைப் பற்றி பேசுகையில் அதில், ஒரு மனிதனின் ஒவ்வொரு செயலையும், அதற்கான பலனையும் பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபிறவி என்பது ஒருவரது பாவங்களையும் புண்ணியங்களையும் வைத்து தீர்மானிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் தண்டனை என்பதைப் பற்றியும் கூறுகிறது.

அடுத்த பிறவியில் பெண்ணாக பிறப்பது அல்லது ஆணாக பிறப்பது

பொதுவாக அடுத்த பிறவியில் ஆணாக பிறப்போமா அல்லது பெண்ணாக பிறப்போமா என்ற ஆவல் மக்கள் மனதில் இருக்கும். அதிலும் சில சமயம் மனிதர்களக பிறப்போமா அல்லது விலங்குகள், பூச்சிகளாக பிறப்போமா என்ற எண்ணம் தோன்றும். மனிதனாக  பிறப்போம் என்றால்  பெண் அல்லது ஆண் என தீர்மானிக்கப்படுவது எப்படி என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணைப் போலவே நடந்து கொண்டால், பெண்கள் செய்ய வேண்டிய செயல்களை செய்தந்தால், பிறகு ஒரு ஆணின் ஆன்மா அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்கிறது.

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

அதேபோல, மரணத்தின் போது ஒருவனுக்கு என்ன பற்றுதல் இருக்கிறதோ, அது அவனுடைய பாவ-புண்ணியத்தையும், சொர்க்க-நரகத்தையும் அடுத்த பிறவியில் ஆணா பெண்ணா என்பதையும் தீர்மானிக்கிறது. ஒருவன் இறக்கும் போது அவனது மனம் பெண்ணை பற்றிய நினைவுடன் இருந்தால், அடுத்த பிறவியில் அவன் பெண்ணாகப் பிறக்கிறான். எனவே, இறப்பின் போது கடவுளின் பெயரை உச்சரிக்குமாறு புராணங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, முக்தி அடைந்து கடவுளிடன் சரண்டைகிறார்.

அதுமட்டுமின்றி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒரு மிருக தன்மையுடன் நடந்து கொண்டால், அடுத்த ஜென்மத்தில் விலங்காகப் பிறக்கிறான். மிருகத்தனமான நடத்தை என்பது விலங்குகளைப் போல  நடந்துகொள்வது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News