‘இந்த’ மீன் வளர்த்தால் வீட்டில் பணம் கொழிக்குமாம்..! அது என்ன மீன் தெரியுமா..?

Fish Vastu Tips: பலர், வீட்டில் செல்வம் கொழிப்பதற்காக மீன்களை வீட்டில் வளர்ப்பர். இதில் குறிப்பிட்ட சில மீன் வகைகளை வளர்த்தால் மட்டும் செல்வம் கொழிக்கும் என கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Sep 24, 2023, 05:35 PM IST
  • வீட்டில் மீன் வளர்ப்பதை பலர் வாஸ்து முறையாக கருதுகின்றனர்.
  • ஒரு சில மீன்களை வீட்டில் வளர்த்தால் பணம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
  • எந்த மீனை வளர்த்தால் வீட்டில் பணம் கொழிக்கும்? டிப்ஸ் இதோ.
‘இந்த’ மீன் வளர்த்தால் வீட்டில் பணம் கொழிக்குமாம்..! அது என்ன மீன் தெரியுமா..?  title=

நம்மில் பலர், நம்முடைய மன ஆறுதலுக்காகவும் நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவும் மீன்களை வாங்கி வளர்ப்போம். ஒரு சிலர், வீட்டில் நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றும் பணம் கொழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் வளர்ப்போம். வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில மீன்களை வளர்ப்பதால் நமது வீட்டில் பணமழை கொட்டுமாம். 

மீன் வளர்ப்பு:

முன்னர், பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே மீன்கள் வளர்க்கப்படும் என்ற பிம்பம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி பலரது வீட்டிலும் மீன்கள் வளர்க்க ஆரம்பித்து விட்டனர். ஒரே இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் அந்த மீன்களை பார்க்கையில் மனம் லேசாகி பல நேரங்களில் கவலையை மறக்கடிக்க செய்கிறது. இதனால் மன அழுத்தம் குறைவதாக சில ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகள் பெண்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? தெரியுமா?

செல்வத்தை வாஸ்து மீன்கள்:

மீன் வளர்ப்பு என்பது தமிழகத்தில் பலரது வீட்டில் வாஸ்து முறையாக பார்க்கப்படுகிறது. இதை சீன மொழியில் பெங்சூய் என்பர். இது, சீனாவில் ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. இதில், வாஸ்து மீன்களாக பார்க்கப்படுபவை அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் ஃபிஷ் மற்றும் கோய் என்பவை. இதில அரோனா வகை மீன்களை வீட்டில் வளர்த்தால் வீட்டில் பண மழை கொட்டும் என கூறப்படுகிறது. ஃபினான்ஸ், வங்கி தொழிலில் இருப்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள், சுய தாெழில் செய்பவர்கள் இது போன்ற வாஸ்து மீன்களை வீட்டில் வளர்த்தால் பணம் புழங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. 

கண்படாமல் தடுக்கிறது:

“சொல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது..” என்பர். நம் வீட்டில் மீன் தொட்டியை வைத்து மீன் வளர்ப்பது நம் மீதும் நம் வீட்டில் உள்ளவர்கள் மீதும் படும் கண் திரிஷ்டியை அகற்றுவதாக கூறப்படுகிறது. கண் திரிஷ்டியால் ஏற்படும் கெட்ட சக்தியை மீன் தொட்டியை அகற்றுவதாகவும் வீட்டில் தீய எண்ணங்கள் பரவாமல் இது தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி களைக்கட்டுமாம். 

மீன் தொட்டியை எங்கு வைக்கலாம்..?

நீர் அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் வீட்டின் வடக்கு மூலையில் வைப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இது, வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க உதவும் என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு அல்லது தென் மேற்கு திசையிலும் மீன் தொட்டியை வைக்கலாம். இதனால், காதல் அல்லது திருமண வாழ்க்கை சிறக்கலாம் என்றும் வாழ்வில் இன்பம் பெருகும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இதை தவிர்த்து மீன் தொட்டியில் விதவிதமான நிறங்கள் நிறைந்த பூக்களையும் வைக்கலாம். சிலர் சமையலறையில் மீன்களை வைப்பர். இதனால், வீட்டில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | உடல் எடை வேகமாக குறைய..சாப்பிட்ட பிறகு ‘இதை’ செய்தால் போதும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News