சீதா ராமன் அப்டேட்: ராமிடம் சிக்கிய ரவுடி.. சீதாவின் கடத்தல் விஷயத்தில் சிக்கிய அர்ச்சனா!!

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2023, 12:12 PM IST
  • கடத்திய ரவுடியை கண்ட சீதா.
  • ரவுடியின் போனில் அர்ச்சனாவின் நம்பர்.
  • கண் கலங்கும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: ராமிடம் சிக்கிய ரவுடி.. சீதாவின் கடத்தல் விஷயத்தில் சிக்கிய அர்ச்சனா!! title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் வீட்டுக்கு வர மகா நல்லவள் போல் வேஷம் போட பிறகு ராம் மற்றும் சீதா இருவரும் இரவு நேரத்தில் வெளியே நடந்து வருகின்றனர். 

கடத்திய ரவுடியை கண்ட சீதா

அப்போது ஓரிடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக ஐஸ்காரனை கூப்பிட அதே சமயம் அதே ஐஸ்காரனை சீதாவை கடத்திய ரவுடியும் கூப்பிடுகிறான். பிறகு சீதா அந்த ரவுடியை கவனித்து விட்டு ராமிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறார். 

ரவுடியின் போனில் அர்ச்சனாவின் நம்பர்

ஒரு கட்டத்தில் ராமிடம் அவன் தான் என்ன கடத்தியது என்று சொல்ல அவன் ரவுடியை துரத்தி கொண்டு செல்லும் போது அவனுடைய செல்போனை தவற விட்டு சென்று விடுகிறான். போனில் மகா என்ற பெயரில் அர்ச்சனாவின் நம்பர் சேவ் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து ராம் அதிர்ச்சி அடைகிறான். 

மேலும் படிக்க | பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

கண் கலங்கும் ராம்

உடனே அந்த நம்பருக்கு போன் போட்டு பேச அர்ச்சனா எடுக்க ராம் எதுவும் பேசாமல் போனை கட் செய்து விட்டு இதையெல்லாம் செய்தது அர்ச்சனா தான் என நினைத்து கண் கலங்குகிறான். 

பிறகு அர்ச்சனா மகாவிடம் ரவுடி போன் பண்ணதாக சொல்ல மகா நான் பேசுறேன் என திருப்பி போன் பண்ண ராம் போனை எடுக்காமல் விட்டு விடுகிறான்.

அதன் பிறகு சீதாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டிற்கு கூட்டி வருகிறான். 

வீட்டுக்கு வந்த ராம் தூக்கம் வராமல் தவிக்க இந்த விஷயத்தை சித்தியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கிறான். 

பிறகு அவன் மகாவிடம் சொல்ல அர்ச்சனா, சித்தப்பா சுபாஷ் என எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்புவது போல நினைத்துப் பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து மறைத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு! நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News