புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு -எழுத்தாளர். ஜி. பாலன்

Biography of Caption Vijayakanth: விஜயராஜ் எப்படி விஜயகாந்த் ஆக மாறினார்? விஜயகாந்துக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது? விஜயகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எது? விஜயகாந்தால் நடிகர் சங்கம் அடைந்த பயண என்ன? இப்படி பல விசியங்கள் குறித்து தமிழக எழுத்தாளர். ஜி. பாலன் அவர்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 28, 2023, 12:41 PM IST
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு -எழுத்தாளர். ஜி. பாலன் title=

Writer G Balan Vs Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று மறைந்தார். அவரது மறைவு குறித்து தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4:45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் குறித்து தமிழக எழுத்தாளர். ஜி. பாலன் அவர்கள் கூறியதை தெரிந்துக்கொளுங்கள்.

1952 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிறந்த விஜயகாந்த்

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி அழகர்சாமி மற்றும் ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

ஆக்சன் படங்கள் விரும்பி பார்த்த விஜயகாந்த்

சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சி வாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

மேலும் படிக்க - Vijayakanth Live Update: விடைபெற்றார் விஜயகாந்த்... தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் என அறிவிப்பு!

சினிமா மீது விஜயகாந்துக்கு ஆர்வம்

சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் நண்பர்கள் வடத்தை அதிகமாக்கியது. நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள வைத்தார், அவரது தந்தை.

திரையரங்குகளுக்கு ஆடுகளை அழைத்து சென்று விஜயகாந்த்

நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்துக்கு மேலே சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர், விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் "ஆட்டுக்கார அலமேலு" படத்தை மதுரை ஏரியாவுக்கு வாங்கி வெளியிட்ட போது, அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் படம் வெளியான திரையரங்குகளுக்கு ஆடு அழைத்து சென்று விளம்பரம் செய்ய உதவியாக இருந்தவர் விஜயகாந்த்.

மேலும் படிக்க - RIP Vijayakanth: கறுப்பு நிறம்.. சிரித்த முகம்... கம்பீர நடை... கணீர் குரல்..! -ஓய்வெடுங்கள் கேப்டன்

விஜயகாந்துக்கு சிபாரிசு செய்த சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்

தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது எண்ணத்தை விஜயகாந்தை தெரிவித்திருக்கிறார். அவரை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், இவர் என் தம்பி மாதிரி என்று அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

அப்போது இயக்குநர் பி. மாதவன் "என் கேள்விக்கு என்ன பதில்" என்கிற படத்தை இயக்கும் வேலையில் இருந்தார். அந்தப் படத்தை மதுரை ஏரியாவிற்கு சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வாங்கி இருந்தது.

ரஜினிகாந்த் பின்பற்றிய விஜயகாந்த்

ரஜினியை போன்று முடிவெட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயகாந்தை பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்து விட்டதாம். அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்தாராம். 

மேலும் படிக்க - Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!

சினிமா வாய்ப்பு தேடி அழைந்த விஜயகாந்த்

அதன் பிறகு சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கியவாறு பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி விஜயகாந்த் அழைந்துள்ளார்.

சுதாகர், ராதிகா நடிப்பில் "இனிக்கும் இளமை" படத்தை தொடங்கினார் இயக்குநர் எம்.ஏ.காஜா. அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார் சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக். விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது "இனிக்கும் இளமை" படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வழங்கினார்.

"இனிக்கும் இளமை" படம் மூலம் அறிமுகம்

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979 ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான "இனிக்கும் இளமை" படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த, அதன் பிறகு "அன்னக்கிளி" ஆர்.செல்வராஜின் "அகல்விளக்கு" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" படம்தான்.

மேலும் படிக்க - விஜயகாந்த் ‘கேப்டன்’ என அழைக்கப்படுவது ஏன்? அடைமொழிக்கு பின்னால் இருக்கும் பெரிய கதை!

சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடிக்க வாய்ப்பு

"சட்டம் ஒரு இருட்டறை" படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார்கள் யாரும் தேறவில்லை. ஒரு நாள் உதவி இயக்குனர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்பு கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்து விட்டது. உடனே அவரை பிடிக்க சொல்லி உதவியாளரை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள்.

நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீங்களா என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, நான் நடிக்கத்தான் டிரைய் பன்னிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்றும், தன் பெயர் விஜயராஜ் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திருப்பு முனையாக அமைந்த சட்டம் ஒரு இருட்டறை

அப்போது விஜயகாந்துக்கு விஜயராஜ் என்று பெயர். அதன் பிறகு தொடங்கியது தான் "சட்டம் ஒரு இருட்டறை" படம். தமிழில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை , தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றியை பெற்றது.

மேலும் படிக்க - Vijayakanth's Punch Dialogues: பார்த்தால் மின்னல், பேசினால் இடி... கேப்டன் விஜயகாந்தின் பஞ்ச் டயலாக்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகன்

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகனாக வலம் வந்தார்.

கேப்டன் பெயர் வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அன்று முதல் விஜயகாந்த் "கேப்டன்" என பலரால் அழைக்கப்பட்டார்.

ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்த விஜயகாந்த்

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

விஜயகாந்த் பெற்ற விருதுகள்

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது செந்தூரப்பூவே படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் குரவங்களையும் பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க - நிஜ வாழ்விலும் அவர் வாரி வழங்கிய சின்ன கவுண்டர்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

நடிகர் சங்கக் கடனை அடைத்த விஜயகாந்த்

1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

காவிரி நதிநீர் போராட்டம்

2002 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து "நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை" என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை இயக்குநர் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார்.

விஜயகாந்த் திருமணம் மற்றும் குடும்பம்

1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

(இந்தக் கட்டுரையை தொகுத்தவர் : எழுத்தாளர். ஜி. பாலன்)

மேலும் படிக்க - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News