Cyber Attack: இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்ட முயற்சித்த பாகிஸ்தானின் சதி அம்பலம்!

Cyber Alert On Sriram Consecration Day: ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தால், அதைக் குலைக்க, இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் பாகிஸ்தானின் சதி அம்பலமானது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 24, 2024, 06:34 AM IST
  • இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் சதி முயற்சி
  • ராமர் கோவில் கும்பாபிஷேகம்
  • பாகிஸ்தானின் சதி முயற்சி அம்பலம்
Cyber Attack: இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்ட முயற்சித்த பாகிஸ்தானின் சதி அம்பலம்! title=

நியூடெல்லி: குழந்தை ராமர் 'பிராண பிரதிஷ்டை' செய்யப்பட்டதால் மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் பாகிஸ்தானின் சதி அம்பலமாகியிருக்கிறது. ஜனவரி 22, 2024 அன்று, பிரமாண்ட ராமர் கோவிலில் பகவான் ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய சரித்திரத்தின் பொன்னேடுகளில் முக்கிய இடம் பிடித்த அந்த நன்னாளில், இந்தியா முழுவதும் தனது இல்லம் திரும்பி வந்த ஸ்ரீராமரை வரவேற்று, தீபாவளியைக் கொண்டாடுவது போல் தோன்றியது. ஸ்ரீராமரை வரவேற்கும் வகையில் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டதைக் குறிக்கும் திருவிழா இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

ஆனால், கோடிக்கணக்கான இந்தியர்களின் மகிழ்ச்சியை அண்டை நாடான பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு, அந்நாட்டின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பாபர் மசூதியை இடித்து கோவில் கட்டப்பட்டது என்று கூறி, பாபர் மசூதி விவகாரத்தை பாகிஸ்தான் முன்வைத்தது. அதிகாரப்பூர்வமாக, இது பாகிஸ்தானின் நிலைப்பாடு, ஆனால் திரைக்குப் பின்னால், இந்தியாவில் வன்முறையைப் பரப்புவதற்கான சதியும் நடந்து கொண்டிருந்தது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் உத்தரவின் பேரில், பிராண் பிரதிஷ்டை நாளில் இந்தியாவில் வன்முறையைத் தூண்டும் திட்டம் தீட்டப்பட்டது. இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வகுப்புவாதக் கலவரம் ஏற்படும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இந்த நோக்கத்திற்காக, #BabriZindaHai என்ற ஹேஷ்டேக் திங்கள்கிழமை காலை முதல் சமூக ஊடக தளமான X இல் ட்ரெண்டிங்கில் இருந்தது.

மேலும் படிக்க | Ramar Idol Ornaments: ராமர் சிலை நகைககளில் 18,000 மரகதங்கள், வைரங்கள்... தங்கம் எத்தனை கிலோ தெரியுமா?

இந்தியாவின் கொண்டாட்டத்தின்போது, #BabriZindaHai என்ற ஹேஷ்டேக் மற்றும் அவர்களின் மொழியைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட பதிவுகளைப் பார்க்கும்போது, இந்தப் பதிவுகள் மூலம் நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக சந்தேகம் எழுந்தது. எனவே, #BabriZindaHai என்ற ஹேஷ்டேக்கிற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், உண்மையான நோக்கம் என்ன, அது ஏன் குறிப்பாக கோவில் திறப்பு நாளின்போது செய்யப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கினார்.

ஜனவரி 22ஆம் தேதி காலை 6.30 மணியளவில் #BabriZindaHai என்ற ஹேஷ்டேக்குடன் முதல் இடுகை போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஹேஷ்டேக் ஆய்வாளரின் முடிவுகளின்படி, #BabriZindaHai ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தும் 25 சதவீத இடுகைகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவை.

அதைத் தொடர்ந்து, இரவு 11 மணிக்குப் பிறகு, சில சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து அதே ஹேஷ்டேக்குடன் இடுகைகள் உருவாக்கப்பட்டன, இது அந்த ஹேஷ்டேகை மேலும் பெருக்கியது. திங்கட்கிழமை பிற்பகலில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, #BabriZindaHai இந்தியாவில் ட்ரெண்டாகத் தொடங்கியது.

மேலும் படிக்க | 250 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் வடிக்கப்பட்ட அயோத்தி ராமர் சிலை!

X தளத்தில் #BabriZindaHai ஹேஷ்டேக் கொண்ட பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட ஆத்திரமூட்டும் மொழி இந்து மற்றும் முஸ்லீம் சமூக மக்களைத் தூண்டியது. இது, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ராமர் கோயில் இடிப்பை முன்னிலைப்படுத்தி இந்துக்களைத் தூண்டும் சதியாகவும் தோன்றுகிறது. பாகிஸ்தானின் சதியை அறியாத பலரும், இதனை பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவில், குழந்தை ராமர் பிரதிஷ்டை நாளில் வன்முறையை தூண்டி, அதன் மூலம் நாட்டின் சுற்றுச்சூழலை கெடுப்பதே பாகிஸ்தானின் நோக்கம். இருப்பினும், பாகிஸ்தான் இது போன்ற வன்முறைச் சதி நடக்கலாம் என்ற ஊகத்தில் ஏற்கனவே சைபர் ரெஸ்பான்ஸ் குழுவை நியமித்து இதுபோன்ற செய்திகளை கண்காணித்து வந்தது. முன்னெச்சரிக்கை காரணமாக ராமர் பிரதிஷ்டை நாள் அமைதியாக கழிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலகெங்கிலும் இருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அற்புத நிகழ்வான 'பிராண பிரதிஷ்டை' விழாவில், அயோத்தியில் உள்ள பெரிய கோவிலின் கருவறையில் திங்கள்கிழமை குழந்தை ராமர் சிலையான ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது.

மேலும் படிக்க | 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சியில் புனருத்தாரணம் பெற்ற புராதன ஆலயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News