நீங்கள் தீவிரவாதியா என்று கேட்கும் அமெரிக்க விமான நிலைய கேள்வியால் எழுந்த பரபரப்பு

அமெரிக்க விமான நிலையத்தின் “உயர் நிலை” பாதுகாப்பு தொடரான கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2022, 10:23 PM IST
  • தீவிரவாதியா நீங்கள்?
  • அமெரிக்க விமானநிலையத்தின் கேள்வி
  • கலாய்க்கும் நெட்டிசன்கள்
நீங்கள் தீவிரவாதியா என்று கேட்கும் அமெரிக்க விமான நிலைய கேள்வியால் எழுந்த பரபரப்பு title=

புதுடெல்லி: அமெரிக்க விமான நிலைய கியோஸ்க் பாதுகாப்பு கேள்வி பல கேள்விகளை எழுப்புகிறது. ரஜத் சுரேஷ் என்ற ட்விட்டர் பயனர், சுய-செக்-இன் கவுண்டர் திரையின் புகைப்படத்தை வெளியிட்டார், அதில் “நீங்கள் தீவிரவாதியா?” என்று கேட்கப்பட்டுள்ளது.  

அமெரிக்க விமான நிலையத்தின் “உயர் நிலை” பாதுகாப்பு தொடரான கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சுய-செக்-இன் கவுண்டரின் படம் சமூக ஊடக தளங்களில் பல்வேறுவிதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

ரஜத் சுரேஷ் என்ற ட்விட்டர் பயனர், சுய-செக்-இன் கவுண்டர் திரையின் புகைப்படத்தை வெளியிட்டார், அதில் ஒரு நபரிடம், “நீங்கள் தீவிரவாதியா?” என்று கேட்கிறார்கள், அதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும்.

 

 

சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "விமான நிலையத்தின் பாதுகாப்பு இன்னும் நேரடியானதாகிறது" என்ற தலைப்புடன் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் இந்தப் பதிவை பகிர்ந்த சில மணிநேரங்களில், இணையதளத்தில் வைரலாகியது. 69.1K விருப்பங்களையும், 76,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றது.

இந்த படம் இணையவாசிகளிடம் பல்வேறு கவலைகளையும் எழுப்பியிருக்கிறது. யாராவது தவறுதலாக ‘ஆம்’ என்று அழுத்தினால் என்ன நடக்கும் என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

"என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நான் ஆம் என்பதைக் கிளிக் செய்யப் போகிறேன்" என்று ஒருவர் கூறுகிறார்.

மற்றொருவர் "இது விமான நிலையங்களில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். பயங்கரவாதிகள் தங்கள் தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று நகைச்சுவையாக கூறினார்.

 

 

மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவிக்கையில், “9/11 முதல், எங்கள் விமான நிலைய செக்-இன் எவ்வாறு கணினிமயமாக்கப்பட்டது, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புகள் மிகக் குறைவு என்பது எனக்கு உண்மையில் புரியவில்லை” என்று கூறுகிறார்.  

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News