இந்தி எவர்கிரின் பாடலை பாடி அசத்திய உஸ்பெகிஸ்தான் பாட்டி!!

இந்தி மொழியில் உள்ள எவர்கிரின் பாடலை பாடி அசத்திய உஸ்பெகிஸ்தான் மூதாட்டி!!

Last Updated : Aug 6, 2018, 04:25 PM IST
இந்தி எவர்கிரின் பாடலை பாடி அசத்திய உஸ்பெகிஸ்தான் பாட்டி!! title=

இந்தி மொழியில் உள்ள எவர்கிரின் பாடலை பாடி அசத்திய உஸ்பெகிஸ்தான் மூதாட்டி!!

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அரசு முறை பயணமான மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ஆகியோர் சென்றனர். 

அப்போது உஸ்பெகிஸ்தான் மூதாட்டி ஒருவர், இந்தி மொழியில் உள்ள எவர்கிரின் பாடலான ஸ்ரீ 420 படத்தின் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார். ரவிஷ் குமார் தன் டிவிட்டர் பக்கத்தில் பாலிவுட்டிற்கு எல்லைகளே கிடையாது என்பதை நாம் அறிவோம், இந்தி சினிமா பாடல்களின் மீதான பற்றினால் உஸ்பெகிஸ்தான் மூதாட்டி ஒருவர் ராஜ்கபூர் மற்றும் நர்கிஸ் ஆகிய பாலிவுட் நடிகர் மற்றும் நடிகையின் பெயர்களை அவர்களின் பிள்ளைக்கு வைத்துள்ளார். அவருக்கு சல்யூட் பண்ணுங்கள் என்று கூறிய அவர் பாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோ காட்சியானது கீழே இணைக்கப்பட்டுள்ளது...!  

 

Trending News