ஐபிஎல் 2022-ல் க்ளென் மேக்ஸ்வெல் விளையாடுவது சந்தேகம்?

க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2022ன் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.     

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 08:14 PM IST
  • ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது
  • மேக்ஸ்வெல் வினி ராமன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்
  • திருமணத்துக்காக தமிழில் அச்சிடப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் 2022-ல் க்ளென் மேக்ஸ்வெல் விளையாடுவது சந்தேகம்? title=

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆரம்ப சில ஆட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.  இது குறித்து சமீபத்திய நேர்காணலில் மேக்ஸ்வெல் கூறுகையில்,  முதலில் நான் எனது திருமணத்திற்கான தேதிகளை ஏற்பாடு செய்தபோது கிரிக்கெட் போட்டிகளுக்கு இரண்டு வார இடைவெளி இருந்தது. எனவே நான் எந்த தொடரிலும் தவறிவிடப் போவதில்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் சில மாற்றங்களினால் இப்போது பாகிஸ்தான் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது" என்று கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | அவேஷ் கானிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் வினி ராமன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.  இந்நிலையில், சிறிது தினங்களுக்கு முன் தங்களின் காதலை உறுதிபடுத்திய இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தனர். மேக்ஸ்வெல் மற்றும் வினிராமன் ஆகியோர் பெற்றோருடன் இருக்கும் புகைப்படமும், அவர்களின் திருமணத்துக்காக தமிழில் அச்சிடப்பட்ட புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேக்ஸ்வெல்லின் காதலி வினி ரமணியின் குடும்பம் சென்னையை பூர்வீகமாக கொண்டது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் குடும்பம் மெல்பேர்னில் வசிக்கின்றனர். வினி ராமன் மருத்துவராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. மேக்ஸ்வெல்லுகும், வினி ராமனுக்கும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விரைவில் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக போவதற்கு, ரசிகர்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.  ஐபிஎல் 2022 போட்டிகள் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கான அட்டவணையை கூடிய விரைவில் பிசிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் 2022: ஒரு நல்ல சமையல்காரனாக விரும்புகிறேன் - சுரேஷ் ரெய்னா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News