’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்...' கம்பீரை சாடிய சேவாக்!

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிகார பசிக்கும், ஆணவத்திற்காகவும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சேவாக் பேசியிருப்பது கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2023, 09:03 PM IST
  • மக்களுக்கு சேவை செய்யவா வர்றாங்க?
  • ஈகோவுக்காக அரசியலுக்கு வருகிறார்கள்
  • காம்பீரை விளாசிய வீரேந்திர சேவாக்
’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்...' கம்பீரை சாடிய சேவாக்!  title=

இந்திய கிரிக்கெட் அணியின் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என ஜெர்சியில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒரு காலத்தில் காம்பீர் மற்றும் சேவாக் இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கிய நிலையில், ஓய்வு பெற்ற பிறகு காம்பீர் பாஜகவில் சேர்ந்து எம்பியாகிவிட்டார். ஆனால் சேவாக் விளையாட்டு தளத்திலேயே இன்னும் இருக்கிறார். காம்பீரைப் பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருப்பார். குறிப்பாக விராட் கோலியை அவருக்கு பிடிக்காது என்பதால் அவர் குறித்து ஏதாவதொரு சர்ச்சைக் கருத்தை கூறுவார். இப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணையாளராக இருக்கும் காம்பீர், மைதானத்துக்கு வெளியே செல்லும்போது ரசிகர்கள் கோலி கோலி என கூச்சலிட்டதால் அவர்களை நோக்கி ஆபாசமாக சைகை செய்தார். இது பொதுவெளியில் சர்ச்சையானது. 

மேலும்படிக்க | விராட் கோலி தான் அந்த பட்டப் பேரு வச்சாரு - சிலாகிக்கும் முகமது ஷமி

அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனை நேரடியாக குறிப்பிடாமல் ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார். அதில் கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த சேவாக், தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என கூறினார். இரு பெரிய கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தாகவும் ஆனால் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு விளையாட்டு வீரராகவே தான் அறியப்பட வேண்டும் என விரும்புவதாகவும், ஆணவத்திற்கும், அதிகார பசிக்கும் அரசியலில் ஈடுபடுவதை தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இதேபோல் சினிமா பிரபலங்களும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சேவாக், இத்தகையவர்கள் பொதுவாக ஈகோ பிரச்சனைக்காக அரசியல் களத்தில் குதிப்பதாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சேவாக் பொதுவாக சொன்ன கருத்தை காம்பீர் மீது வஞ்சம் கொண்டு பேசியதாக ரசிகர்கள் திரித்து கூறுவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | IND vs NEP: ஒற்றை கையால் கேட்ச் பிடித்து சாதனை படைத்த விராட் கோலி... என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News