சென்னை அருகே துப்பாக்கி முனையில் 72 ரவுடிகள் கைது!!

சென்னை பூந்தமல்லி அருகே பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக ஒன்று கூடிய 72 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

Last Updated : Feb 7, 2018, 10:16 AM IST
சென்னை அருகே துப்பாக்கி முனையில் 72 ரவுடிகள் கைது!! title=

சென்னை பூந்தமல்லி அருகே பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக ஒன்று கூடிய 72 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லி அருகே ரவுடி கும்பல் ஒன்று பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி அருகே முகாமிட்ட போலீசார், ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த ரவுடிகளை, துப்பாக்கி முனையில் போலீசார் சினிமா பாணியில் கைது செய்தனர்.

பிடிபட்ட ரவுடிகளிடமிருந்து கத்தி, அரிவாள், 40 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 கார் பறிமுதல் செய்தனர் போலீசார்.

Trending News