DMK-வின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்...!

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 12:00 PM IST
DMK-வின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்...!  title=

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! 

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. பல ஆண்டுகளாக அப்பகுதியில் சத்யா அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். அப்பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவரை திமுக-விலிருந்து தற்காலிகமாக நீக்கி அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

இதை தொடர்ந்து, நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், தற்போது திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு அவர்களை நியமிக்கப்பட்டுளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..! 

 

Trending News