அமலாக்கத்துறை, சிபிஐ இடைதரகர்கள் மூலம் என்னைகூட மிரட்டினர் - சபாநாயகர் அப்பாவு

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை கூட மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 02:19 PM IST
  • சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு
  • சிபிஐ அமலாக்கத்துறை என்னை கூட மிரட்டியது
  • 3 மாதங்களாக மிரட்டல் தொடர்வதாக கூறியுள்ளார்
அமலாக்கத்துறை, சிபிஐ இடைதரகர்கள் மூலம் என்னைகூட மிரட்டினர் - சபாநாயகர் அப்பாவு title=

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழக அரசு ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை சிபிஐ அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறிவைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசி குறிப்பிட்ட தொகையை வாங்குவது என இப்படித்தான்  நடந்நு வருகிறது. 

மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்

என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். ஒன்றிய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்ய சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள்.
ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் என்னை மாற்ற சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91 -ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆறு வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

ஆனால் ஆளுநர் அவர்கள் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில் தமிழக ஆளுநர் இது மதச்சார்புடைய நாடு இந்தியா என பேசி வருகிறார்" என குற்றம்சாட்டினார். தொடர்ந்து தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, அண்ணாமலை அவரைக் குறித்து அவரே இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், " மின்வாரியத்தில் நிலக்கரி வழங்கியதில் 800 கோடி அளவிற்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 25 லட்சம் கோடி அளவிற்கு 500 முதல் 1000 பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடனை ரைட் ஆஃப் ( கடன் கணக்கை நீக்கியுள்ளது) செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கிறது" என மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News