தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - தொடங்கியது நடவடிக்கை; 4 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையின்படி உதவி ஆணையர் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 21, 2022, 08:15 PM IST
  • தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தது
  • அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
  • தற்போது 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - தொடங்கியது நடவடிக்கை; 4 போலீசார் சஸ்பெண்ட் title=

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை உத்தரவிட்டார். அதில் கந்தையா மற்றும் தமிழரசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காவலர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். சுடலைக்கண்ணு கிரேடு 1 காவலராக நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு பலர் உயிரிழக்க காரணமாக இருந்தார். 

மேலும் படிக்க | இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதியுங்கள் - சீமான் வலியுறுத்தல்

அதே போல் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் சங்கர், அப்போதைய டிஐஜி கபில்குமார் சாராட்கரரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தார். இவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் உயிரிழக்க காரணமாக இருந்தார். தற்போது இவர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலரது உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் உள்ள திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் பலி - ஸ்ரீபெரும்புதூரில் சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News