ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புகளுக்கு 'மிகவும் உறுதியானவர், என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு நேற்று மாலை 7 மணிக்கு சுமார் 11 நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
@realdonaldtrump என்னும் டொனால்ட் டிரம்பின் கணக்கு, "ஒரு டிவிட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை டிவிட்டரில் மொத்தம் 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். நேற்று மாலை டிரம்பின் டிவிட்டர் கணக்கு செயலிழந்தது அதிரிச்சி ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் ஏற்படுத்திய சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் நடத்தியதோடு, ஓட்டுனர் லாரியை விட்டு கீழே இறங்கி, அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினான். அதில் ஒரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கடைசியாக போலீசார், அந்த ஓட்டுனரை கைது செய்தனர். அந்த ஓட்டுனருக்கு வயது 29. அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். அதிபர்களின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்று.
ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில், நான் தான் ட்ரம்ப்பின் முதல் மனைவி, எனவே நான் தான் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றும் கூறியிருந்தார். ஆனால் இவரது பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அமெரிக்கா லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் எதற்காக இப்படி செய்தார் என்று கண்டறிய முடியாமல் எப்.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் திணறுகின்றனர்.
அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று லாஸ் வேகாஸுக்கு வருகை புரிகிறார். இந்த பயனத்தின் போது, கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைப்பு செய்வதற்கான பணிகளை திட்டமிடும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஐ.நா.வின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி வடகொரிய தொடர்ந்து தந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் 6–வது முறையாக தனது அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியது.
ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்தார்.
வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. முன்னதாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்து உலக நாடுகளை பயமுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு சீனா மற்றும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது. வடகொரியாவின் இந்த செயல் மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆய்த சோதனைகளை நடத்தி வருகிறது. சோதனைகளை பல நாடுகள் அந்நாட்டு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு சீனா மற்றும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த வலுவான பொருளாதார தடை தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல் மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கிறது என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா, இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என கூறியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கடல் எல்லை அருகில் சோதனை நடத்தப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றய டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.