20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு ஜூலை 7 மற்றும் 8 தேதி ஜெர்மனி ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விளாடிமிர் புடினும் மற்றும் டொனால்ட் டிரம்பும் 2வது முறையாக சந்தித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வரவேற்றனர்.
டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். பின்னர் இருவரும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது டொனால்டு டிரம்ப் கூறியது,
மிகச்சிறந்த பிரதமரான நரேந்தி மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக பிரதமர் மோடி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திங்கட்கிழமையன்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசும்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர் உயிரிழந்தார்.
வடகொரியாவில் சித்ரவதைச் செய்யப்பட்டதால் தான் மாணவர் மரணமடைந்தார் எனா அமெரிக்க கூறியது. இந்நிலையில், வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அமெரிக்கா - கியூபா இடையில் பல ஆண்டுகளாகப் பனிப் போர் நீடித்து வந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா சமாதான பேச்சுவார்த்தைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன் மூலம், கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால், இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்ப் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இது குறித்து அவர்:-
வரும் 26-ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்த சந்திப்பால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில்அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, மோடி அவரை முதல் முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பிறகு மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த பராக் ஒபாமாவுடன் மோடி மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையை நடத்தி வந்த எப்.பி.ஐ.யின் இயக்குனர் ஜேம்ஸ் கோமியை சமீபத்தில் அதிபர் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் தனது பதவி நீக்கம் தொடர்பான அமெரிக்க செனட் சபையின் விசாரணையின் போது, ஜேம்ஸ் கோமி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யின் இயக்குனராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கோமியை, கடந்த மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பிரசார குழுவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் தொடர்பு குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்துவதால்தான், ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில் எப்.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கிறிஸ்டோபர் ரேயை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். இந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக புகார் தொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை டிரம்ப் தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருக்கும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ரஷ்ய தூதர் செர்ஜே கிஸ்லயக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த வங்கி உயரதிகாரி செர்ஜே கோர்கோவை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தி வெளியானது.
தீவிரவாதத்தால் அதிகமாக பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் எனறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 50 இஸ்லாமிய நாடுகள் பங்கு பெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக டிர்ம்ப பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடாகும்.
இந்த மாநாட்டில் பேசிய டொனால்ட் டிரம்ப்:-
எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர்களிலேயே பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
எப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியன் ஸ்பைசர் கூறுகையில்:- எப்பிஐ இயக்குனர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல்களின் கோரிக்கையை அதிபர் ஏற்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய ஹாக்கர்கள் மற்றும் எப்பிஐ இயக்குநர் கோமே ஆகியோரே தனது தேர்தல் தோல்விக்கு காரணம் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி கூறியதாவது:-
கடந்த வருடம் அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால், நான் அதிபராகியிருப்பேன். தேர்தலில் தோல்விக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்.
இன்ஃபோஸிஸ் நிறுவனம், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 10000 அமெரிக்க மக்களுக்கு வேலை வழங்கப் போவதாகக் கூறி உள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ஹெச்-1பி விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறையில் கடுமையான திருத்தம் கொண்டுவந்துள்ளார்.
இதனால், அமெரிக்காவில் இயங்கும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள், பாதிப்பை சந்தித்துள்ளன. டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு காரணமாக, இந்நிறுவனங்கள் தற்போது புதிதாக ஆள் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.
வடகொரியாவிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அந்நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளதார்.
ஐக்கியநாட்டு சபை தீர்மானங்கள் உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்நாடு மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை.
மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வாரம் மீண்டும் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான ஹச்-1 பி பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஹச்-1 பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.