‘பனாமா பேப்பர் லீக்ஸ்’: இன்று தீர்ப்பு!! நவாஸ் ஷெரீப்புக்கு பதவிக்கு சிக்கலா?

Last Updated : Jul 28, 2017, 10:41 AM IST
‘பனாமா பேப்பர் லீக்ஸ்’: இன்று தீர்ப்பு!! நவாஸ் ஷெரீப்புக்கு பதவிக்கு சிக்கலா? title=

‘பனாமா பேப்பர் லீக்ஸ்’  மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. 

கடந்த ஆண்டு பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம் ‘பனாமா பேப்பர் லீக்ஸ்’  என்ற ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதால், நவாஸ் ஷெரீப்புக்கு தீர்ப்பு எதிராக அமைந்தால், அவரது பதவிக்கு சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Trending News