மக்களவைத் தேர்தல் 2019: வாக்கை பதிவு செய்த முக்கிய வேட்பாளர்கள்!!

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்கை பதிவு செய்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2019, 10:19 AM IST
மக்களவைத் தேர்தல் 2019: வாக்கை பதிவு செய்த முக்கிய வேட்பாளர்கள்!! title=

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மே 12) ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

இன்று (மே 12) உத்திரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், டில்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

உ.பி. மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 

அவர்கள் தங்கள் வாக்கினை வரிசையில் நின்று செலுத்தினர். யார் யார் செலுத்தினார்கள் என்று பார்ப்போம்.

 

 

 

 

 

 

 

Trending News