குடி போதையில் வெற்றி, பழி தீர்க்கத் துடிக்கும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

செல்வ முருகன் சமாதானப்படுத்தியும் அவள் வெளியில் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என்று வெற்றி சொல்ல பரபரப்பாக நகர்கிறது மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!

Written by - RK Spark | Last Updated : May 11, 2023, 02:29 PM IST
  • ஜீ தமிழ் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
  • திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.
  • தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
குடி போதையில் வெற்றி, பழி தீர்க்கத் துடிக்கும் பூஜா - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கல்யாண மண்டபத்தில் பூஜாவை சரளா சமாதானப்படுத்த, பூஜா சக்தியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறி விட்டு செல்கிறாள். அடுத்து ரங்கநாயகி ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டு அருகில் ரிவால்வரை வைத்துக் கொண்டு, அறையில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள். செல்வ முருகன் சமாதானப்படுத்தியும் அவள் வெளியில் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என்று வெற்றி சொல்ல, இல்லை நான் தான் காரணம் என்று சரண்யா சொல்கிறாள். மறுபக்கம் வெற்றி இன்று வீட்டிற்கு வந்து சக்தியை கூட்டிச் செல்வான் என்று யமுனாவும் துர்காவும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். மேலும் சக்தியிடம் அடிக்கடி வந்து போ எங்களையெல்லாம் மறந்து விடாதே என்று கூறிக்கொண்டு இருக்க வெளியில் ஒரு மோட்டார் பைக் வந்து நிற்க வெற்றி தான் வந்திருக்கிறான் என சென்றுபார்க்க அங்கு ஓட்டலுக்கு யாரோ சாப்பிட ஒரு கஸ்டமர் வந்திருக்க, வெற்றி ஓரிடத்தில் நின்று மது அருந்திக்கொண்டு இருக்கிறான். இதைப் பார்த்து சக்தி வருத்தம் அடைகிறாள்.

மேலும் படிக்க | அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!

 

இங்கே சக்தி வெற்றிக்காக காத்திருக்க வெற்றி சக்தியை அழைக்க வராமல் வெற்றி தன் வீட்டிற்கு போய் விடுகிறான். ரொம்ப பசிக்கிறது என்று சாப்பிட உட்கார அங்கே சக்தி வெற்றிக்கு பரிமாறுகிறாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெற்றி, சாப்பிட மறுத்து சக்தியுடன் சண்டை போடுகிறான். அவள் இது தன் வீடு,  நான் இங்கேதான் இருப்பேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

mp

முந்தைய எபிசோடில், சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட, வெற்றி பூஜா கல்யாணம் நின்று போகிறது. ரங்கநாயகி எல்லார் முன்னிலும் அவமானப்பட்டு தன் வீட்டுக்குப் போகிறாள். அதை தொடர்ந்து ரங்கநாயகி தன் வீட்டில் ஒரு அறையில் போய் கதவை பூட்டிக் கொள்கிறாள். பூஜா மண்டபத்தில் தாலியுடனேயே இருக்கிறாள். சரளாவிடம் கோபித்துக்கொண்டு தாலியுடன் வெளியே போகிறாள்.  வெற்றி அசோக்கை கோபத்தில் அடிக்கிறான். இரண்டு நாள் டயம், அதுக்குள்ள ஊர்ப்பஞ்சயாத்துல உண்மையை ஒத்துக்கிட்டு, சரண்யா வயித்துல வளர்றது உன் குழந்தைதான் சொல்லி அவளை சீர் செனத்தியோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும் என்று கெடு விதிக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News