மகளிர்தின விழாவுக்கு அனைவரும் வருக -கமல்ஹாசன்!

இன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் மகளிர்தின விழாவுக்கு அனைவரும் வருக என கமல் ட்விட்டில் அழைப்பு. 

Last Updated : Mar 8, 2018, 09:09 AM IST
மகளிர்தின விழாவுக்கு அனைவரும் வருக -கமல்ஹாசன்! title=

சென்னையில் இன்று மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். 

இதையடுத்து, திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அதையடுத்து இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது கட்சியின் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் மகளிர்தின விழாவுக்கு அனைவரும் வருக எனவும், இன்று நடக்கும் மகளிர் தின விழாவிற்கு நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளை தவிர்க்கவும் எனவும் நடிகர் மற்றும் மக்கள் நீதி மாய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் ட்விட்டர்:- 

 

Trending News