“மகளிர் தின விழா” அன்புடன் அழைக்கும் மக்கள் நீதி மய்யம்

 மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

Last Updated : Mar 4, 2018, 07:21 AM IST
“மகளிர் தின விழா” அன்புடன் அழைக்கும் மக்கள் நீதி மய்யம்  title=

மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் கலந்துக்கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

அதற்கான காணொளி ஒன்றை மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ யூ-டூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “மகளிர் தின விழா” அன்புடன் அழைக்கிறது. அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினரான ஸ்ரீ ப்ரியா மற்றும் நாசீர் கமீலா தரப்பில் வேண்டுகோள் வைக்கபட்டுள்ளது.

காணொளி:-

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News