700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

முக்கியமான கிரகங்களின் நிலை காரணமாக 700 ஆண்டுகளுக்கு 5 சுப யோகங்களை உருவாகிறது. பிப்ரவரி 19, 2023 முதல், கேதார், ஷங்க், ஷஷ, வரிஷ்ட மற்றும் சர்வார்த்தசித்தி யோகம் உருவாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2023, 01:23 PM IST
  • பஞ்ச மகாயோகம் சில ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • சொத்து, வாகனம் வாங்கலாம். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்! title=

மீனத்தில் குரு சுக்ர யுதி: ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து 9 கிரகங்களும் தான் இருக்கும் ராசிகளை மாற்றுகின்றன. இதனால், மற்ற கிரகங்களுடன் சில சமயம் இணைந்து கூட்டணி உருவாகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகளும், கிரக சேர்க்கைகளும் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த நேரத்தில் சனி கும்பத்தில் உள்ளது. இதனுடன் சூரியன் கும்ப ராசியில் அமர்ந்து சனியுடன் இரண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அதே சமயம் மீனத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். மீனம் குருவின் ராசி. இந்த வகையில் இந்த முக்கியமான கிரகங்களின் நிலை காரணமாக 700 ஆண்டுகளுக்கு 5 சுப யோகங்களை உருவாகிறது. பிப்ரவரி 19, 2023 முதல், கேதார், ஷங்க், ஷஷ, வரிஷ்ட மற்றும் சர்வார்த்தசித்தி யோகம் உருவாகிறது. 

இதன் மூலம் 700 ஆண்டுகளுக்குப் பிறகு 5 மகா யோகங்களின் இந்த அபூர்வ சேர்க்கை உருவாகியிருப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும். 5 முக்கிய யோகங்களின் அரிதாக உருவாகி இருப்பது  கீழ்கண்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் அபரிமிதமான செல்வத்தையும் அள்ளித்தரும்.

மிதுனம்: 

சனி, சூரியன், சுக்கிரன், குரு இணைந்து பஞ்ச மகாயோகம் அமைவது மிதுன ராசியினருக்கு மிகவும் உகந்தது. இவர்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கும். புகழ் உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஒரு பெரிய ஒப்பந்தம் கை கூடும். பண வரவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி உதயம்: 5 மார்ச் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்ட மழை பொழியும்

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். தேர்வு - நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் பெரிய ஆர்டரைப் பெறலாம். சொத்து, வாகனம் வாங்கலாம். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் அதில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: 

கும்ப ராசியிலேயே சூரியன் மற்றும் சனியின் கூட்டணி அமைவதால் பஞ்ச மகாயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அபரிமிதமான பண ஆதாயம் உண்டாகலாம். பெரிய அளவில் சொத்து வாங்கலாம். வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். பெரிய வெற்றியை அடைய முடியும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். வணிகத்தில் கூட்டு அல்லது ஒப்பந்தம் இறுதியாகும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்! இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News