கழிவுகளை மனிதனே அகற்றுவதை அரசு தடுக்க வேண்டும் - ஆதித்தமிழர் பேரவை அதியமான் பேட்டி

மனித கழிவுகளை மனிதனே அல்லும் அவல நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 4, 2022, 12:19 PM IST
  • ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேட்டி
  • மனித கழிவுகளை மனிதரே அள்ளும் அவலத்தை போக்க வேண்டும்
  • அண்ணாமலை மீது கடுமையான விமர்சனம்
கழிவுகளை மனிதனே அகற்றுவதை அரசு தடுக்க வேண்டும் - ஆதித்தமிழர் பேரவை அதியமான் பேட்டி title=

ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் செயலாளர் நீலவேந்தனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனைகூட்டம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமை சேலத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரவை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான், “உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் கடுமையாக விதித்துள்ள ஆணைகளின்படி மல குழியில் மனிதனை இறக்குகின்ற அந்த விஷயத்தை கடந்த காலங்களில் சட்டங்கள் இயற்றின பிறகும் இன்றைக்கும் தூய்மை தொழிலாளர்ககளை  சாக்கடைக்குள் இறக்கி வேலை வாங்குகிற நிலை இருக்கிறது.  மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை நீடித்து வருகிறது.

அப்படி வேலை செய்யும்போது யாரேனும் இறந்துவிட்டால் அதற்கான பொறுப்பு அந்தந்த ஆணையர்களுக்கு உள்ளது என்று தற்பொழுது  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

கடந்த காலங்களில் இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருந்து வந்தனர். தற்போதைய தமிழக அரசு இதனை செயல்படுத்தும் என நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.இதுவரைக்கும் இருந்த ஆட்சியாளர்களைவிட தற்பொழுது நடைபெற்று வரும் அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | குழந்தை இறந்து பிறந்தால் எத்தனை நாட்கள் பிரசவக் கால விடுப்பு எடுக்கலாம்? மத்திய அரசு விளக்கம்

ஆனால் இந்த ஆட்சியில் எப்படியாவது எதையாவது சொல்லி கலவரத்தை மூட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதையாவது உளறிக்கொண்டே இருக்கின்றார்.தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவிதத்தை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருகிறார்.

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கினால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய்,  காலை சிற்றுண்டி திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் இது மாணவிகளுக்கு அருமையான திட்டம்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News