Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?

Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2023, 02:40 PM IST
Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?  title=

Crime News In Tamil: தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பந்துருத்தி அற்புத மாதா கோவில் தெருவில் வசித்து வருபவர் தான் விவேக். 35 வயதான அவர் தஞ்சை சருக்கை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த 29 வயதான மார்த்தாள் மேரி என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மார்த்தாள் மேரி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். விவேக்குடன் அவருக்கு ஏதோ பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்த்தாள் மேரி கணவன் வீட்டுக்கு செல்லாமல் பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளார். அதன்பிறகு பெற்றோர் பேச்சுவார்த்தை நடந்தி கடந்த 22 ஆம் தேதி மார்த்தாள் மேரியை அவரது கணவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு விட்டு வந்துள்ளனர்.

வந்த போன் கால்.. பதறிப்போன பெற்றோர்

மகளை விட்டு வந்து ஒரு நாள் தான் முழுதாய் முடிந்திருந்தது. அதற்குள் கடந்த 24 ஆம் தேதி விவேக், மேரியின் பெற்றோருக்கு போன் செய்து அவரது மகளுக்கு வலிப்பு வந்ததாகவும், அதனால் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் மகளை பார்க்க கிளம்புவதற்குள் மீண்டும் ஒருமுறை விவேக் போன் செய்துள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சிச் செய்தியை அவர் கூறியுள்ளார். அதாவது மார்த்தாள் மேரி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பெண்ணின் பெற்றோர் இடிந்துபோய் உறவினர்களிடம் கதறி அழுதுள்ளனர்.

மேலும் படிக்க - 17 வயது வித்தியாசம்... திருமணத்துக்கு தடை! அக்கா மகளை கொன்று தாய்மாமாவும் தற்கொலை - பகீர் பின்னணி!

மகளின் மரணத்தில் சந்தேகம் - காவல் நிலையத்தில் புகார்

இதனையடுத்து மார்த்தாள் மேரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்தில் விவேக், அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என மொத்தம் 8 பேர் புகார் அளித்தனர். மேலும் மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறி பெற்றோர் உறவினர்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திருமணம் ஆகி 65 நாட்களே ஆன நிலையில், புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் இலக்கியா, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேரி கணவனால் அடித்து துன்புறுத்தப்பட்டாரா?

மார்த்தாள் மேரியின் உடற்கூறாய்வுக்கு பின்னர் தான் அவர் கணவனால் அடித்து துன்புறுத்தப்பட்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணமா என தெரியவரும். நடுக்காவேரி காவல்துறையினர் விவேக் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க - இளைஞர் வெட்டிக் கொலை: 5 பேர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News