கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கும் காவல்துறை

தமிழகத்தில் முன்னர்  அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2021, 08:15 PM IST
  • இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு.
  • அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாக கடைபிடித்து, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்- தமிழக அரசு.
  • தேவையில்லாமல் வீதிகளில் சுற்றுவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - தமிழக காவல்துறை.
கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கும் காவல்துறை  title=

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படுதீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நாள் தொற்றின் அளவு அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் தொற்றின் (Coronavirus) அளவு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கின்றது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. எனினும், இவற்றால் தொற்றின் அளவில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்பதால், தமிழக அரசு இன்று மாலை இன்னும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இதற்கிடையில், முன்னர்  அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.

ALSO READ: ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

இந்த நேரத்தில், அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாக கடைபிடிக்குமாறும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும் தமிழக அரசும் (Tamil Nadu) தமிழக காவல்துறையும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நாளை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வீதிகளில் சுற்றுவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் காவல் துறை பொது மக்களை எச்சரித்துள்ளது. 

முன்னதாக, புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. பல வித புதிய கட்டுப்பாடுகள் இதில் விதிக்கப்பட்டுள்ளன. 

புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மால்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் உணவை எடுத்துச்செல்லவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக இயங்கும் மளிகை காய்கறி கடைகளுக்கு ஏசி இல்லாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் போல இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

ALSO READ: உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News