மேற்கு வங்காளத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட வகையில் நந்திகிராம் தொகுதியில், மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார்.
மக்கள் போதுமான அளவுக்கு "அச்சே தின்" (நல்ல நாள்) பார்த்து விட்டார்கள். இனி நீங்கள் (மோடி அரசு) "சச்சே தின்" (உண்மையான நாட்கள்) பார்ப்பீர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மேற்கோள் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி, யாஸ் புயல் தொடர்பான மறு ஆய்வு கூட்டத்திற்காக மேற்கு வங்கம் சென்ற போது, முதல்வர் மம்தா பானர்ஜி அவரை 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததாக சர்ச்சை எழுந்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,மறுஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கத்தின் முதல்வராக 3-வது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்த 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
இன்று காலை முதலே தனது நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட பின்தங்கியே இருந்தார். ஆனால் 16 வது சுற்றுக்குப் பிறகு, முன்னிலை பெற்ற மம்தா பானர்ஜி, இறுதியில் மீண்டும் பின்னடைவை சந்தித்தார்.
மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் முன்னிலை பெற்றிருந்தாலும் அது தொடக்கநிலை மாயதோற்றமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகிறார்.
மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ். தற்போதைய நிலவரப்படி, திரிணமூல் காங்கிரஸ் 201 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மேற்குக் வங்க மாநிலத்தில் அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.