PM Kisan Samman Nidhi Yojana: இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் நம் நாட்டின் உயிர் நாடியாக உள்ளது. நாட்டு மக்களின் பசியை போக்கி நாட்டின் பொருளார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
விவசாயிகளுக்கான திட்டங்களில் மிக முக்கியமானது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். தற்போது விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்போது இது தொடர்பான ஒரு பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது.
PM Kisan: பிஎம் கிசான் திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் அடுத்த தவணைத் தொகை விரைவில் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணை விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்? இதற்கான தேதி என்ன? இது குறித்து இங்கே காணலாம்.
PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24, 2025 அன்று பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வேளான் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமரின் பீகார் வருகையின் போது, அவர் பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகின்றது. இது மட்டுமின்றி, இந்த சந்தர்ப்பத்தில், பிரதமர் மோடி விவசாயம் தொடர்பான இன்னும் பல திட்டங்களிலும் பங்கேற்று மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேலும் தெரிவித்தார்.
PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்?
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டம் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று சம தவணைகளில் பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது. கடைசியாக அதாவது 18வது தவணையை பிரதமர் மோடி 2024 அக்டோபர் 15 அன்று வெளியிட்டார். 18வது தவணை வந்து சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பிஎம் கிசான் திட்டத்திற்கு e-KYC ஏன் அவசியமாகிறது?
சரியான விவசாயிகள் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கும், எந்த மோசடியும் ஏற்படாமல் இருப்பதற்கும் அரசாங்கம் பிஎம் கிசான் திட்டத்திற்கு e-KYC-யை கட்டாயமாக்கியுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு தவணை பணம் நேரடியாகச் சென்றடைவதற்கு இந்த செயல்முறை அவசியம்.
e-KYC செய்வது எப்படி?
விவசாயிகள் மூன்று வழைகளில் e-KYC செயல்முறையை பூர்த்தி செய்யலாம்:
1.OTP அடிப்படையிலான e-KYC: இந்த செயல்முறை PM Kisan போர்டல் மற்றும் மொபைல் செயலியில் கிடைக்கிறது.
2. பயோமெட்ரிக் e-KYC: இந்த சேவை பொது சேவை மையங்கள் (CSC) மற்றும் மாநில சேவை மையங்களில் (SSK) கிடைக்கிறது.
3. முக அங்கீகார e-KYC: இந்த வசதியை PM Kisan மொபைல் செயலி மூலம் செய்யலாம்.
e KYC செயல்முறையை விரைவாக நிறைவு செய்யவில்லை என்றால், விவசாயிகளின் தவணை சிக்கிக்கொள்ளக்கூடும். ஆகையால், இன்னும் e-KYC-ஐச் செய்து முடிக்காத விவசாயிகள் உடனடியாக இதை செய்வது நல்லது. இல்லையெனில் உங்கள் 19வது தவணையை பெற இயலாது. e-KYC செய்யாமல், எந்தவொரு விவசாயியும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
PM Kisan: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?
- PM Kisan Portal: பிஎம் கிசான் போர்டலில் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
- CSC: அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
- Nodal Authorities: மாநில அரசின் நோடல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதில் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களே உஷார்! பிப்ரவரி 15 கடைசி தேதி, இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ