நீரிழிவை கட்டுக்குள் வைக்க... தினம் ஒரு ஏலக்காய் போதும்... எடுத்துக் கொள்ளும் சரியான முறை

Cardamom To Control Diabetes: தினமும், அதிகமல்ல ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் எடுத்துக் கொண்டால் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2025, 04:19 PM IST
  • சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஏலக்காய்.
  • இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஏலக்காய்.
  • செரிமானம் சிறப்பாக இருந்தால் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவை கட்டுக்குள் வைக்க... தினம் ஒரு ஏலக்காய் போதும்... எடுத்துக் கொள்ளும் சரியான முறை title=

சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சில நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. இந்த மசாலாப் பொருட்கள் ஆயுர்வேதத்தில் பல கடுமையான நோய்களுக்கான சிகிச்சையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம். இவற்றில் ஒன்று ஏலக்காய். இந்த மசாலா அதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக பெயர் பெற்றது.

தினமும், அதிகமல்ல ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் எடுத்துக் கொண்டால் போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஏலக்காய்

ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் தொடர்ந்து ஏலக்காயை உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை 150 என்ற அளவை தாண்டாது. எனவே சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய சுகாதார கழகம் NIH கூறுகிறது.

இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஏலக்காய்

ஏலக்காயில்  நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமானம் சிறப்பாக இருந்தால் சர்க்கரையை கட்டுக்குள் (Health Tips) வைக்கலாம். இது தவிர, ஏலக்காயில் உள்ள பீனால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கின்றன. மேலும் இது உடலில் இன்சுலின் சரியாக செயல்பட உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இது மட்டுமின்றி, ஏலக்காய் சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதாலும், கார்போஹைட்ரேட்களும் விரைவாக ஆற்றலாக மாறுவதாலும், சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும் படிக்க | நெய் கலந்த உணவுகளை இவர்கள் சாப்பிடவே கூடாது..! உயிருக்கே ஆபத்து..!

ஏலக்காயை சாப்பிடும் சரியான முறை

1. வெறும் வயிற்றில் ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 முதல் 2 ஏலக்காயை மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். ஏலக்காயை உட்கொள்ள இதுவே எளிதான வழி. 

2. ஏலக்காய் தண்ணீர்: இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 முதல் 2 ஏலக்காயை போட்டு காலையில் சாப்பிடுங்கள். இது உடலை டீடாக்ஸ் செய்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். 

3. கிரீன் டீயில் ஏலக்காய்: காலையில் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, நீங்கள் அதில் ஏலக்காயையும் சேர்க்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். 

4. ஏலக்காய்த் தூள்: உலர் ஏலக்காயை அரைத்து பொடி செய்து, வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் சேர்த்து தினமும் உட்கொள்ள வேண்டும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். 

5. ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை: ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டையை சம அளவில் அரைத்து, தேனில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எச்சரிக்கை... மாரடைப்பை ஏற்படுத்தும் வைட்டமின் குறைபாடுகள்... தீர்வைத் தரும் சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News