ஜாக்கிரதை! இந்த அறிகுறிகள் தலை மற்றும் கழுத்து புற்றுநோயாக இருக்கலாம்

தலை மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சரிபடுத்தலாம், இல்லாவிடில் அது உறுப்புகளுக்கு பரவி பாதிப்பை பெரிதாகிவிடும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2022, 08:41 AM IST
  • புற்றுநோயானது வயது, வாழ்க்கை முறையை கொண்டு அமைகிறது.
  • மூன்று பேரில் ஒருவருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் தான் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.
ஜாக்கிரதை! இந்த அறிகுறிகள் தலை மற்றும் கழுத்து புற்றுநோயாக இருக்கலாம் title=

ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வகை புற்றுநோய் தொண்டை, வாய், வோகல் கார்ட்ஸ் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட இதர பகுதிகளுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு நேஷனல் சென்டர் ஃபார் டிசீஸ் இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்ட் ரிஸர்ச் வெளியிட்ட அறிக்கையின்படி, புற்றுநோய் பாதித்த மூன்று பேரில் ஒருவருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | அதிகநேரம் தூங்குவது பிடிக்குமா பாஸ் - இதை தெரிஞ்சுக்கோங்க

இந்த வகை புற்றுநோயானது வயது, புவியியல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு அமைகிறது.  இந்த தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோயானது பெண்களை காட்டிலும் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது, இது உடல் சம்மந்தமான காரணிகளால் மட்டும் உருவாவதில்லை, ஆண்கள் அதிகள் உபயோகிக்கும் புகையிலை பழக்கத்தினால் இவை அதிகமாக தாக்குகிறது.  

புகையிலையின் பல்வேறு வடிவங்களான மெல்லும் வகை புகையிலை, புகைபிடிக்கும் வகை, உறிஞ்சும் வகை போன்றவை தலை மற்றும் கழுத்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.  உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் தான் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.  70 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் புகையிலையை உட்கொள்கின்றனர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  புகையிலையை காட்டிலும் மது அருந்துவோருக்கு இந்த நோயின் பாதிப்பு அதிகளவில் இல்லையென்றாலும், மது மற்றும் புகையிலை சேர்த்து பயன்படுத்தினால் இந்த பாதிப்பு அதிகரிக்கும்.  மேலும் நோயெதிர்ப்பு திறன் குறைவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சூரிய ஒளியின் தாக்கம், வாய் சுத்தமின்மை, முறையற்ற பாலுறவு போன்றவற்றாலும் இவற்றின் பாதிப்பு உண்டாக்குகிறது.

இந்நோயின் அறிகுறிகளாக காதுகள் மற்றும் மூக்குகளில் ஒருவித அசௌகரியமான உணர்வு தோன்றுதல், தாடைகளில் வீக்கம், ரத்தம் கலந்த எச்சில், நாக்கில் வெள்ளை/சிவப்பு நிற திட்டுக்கள் உருவாதல், வாயிலிருந்து அடிக்கடி ரத்தம் வருதல், சுவாசிப்பதில் மற்றும் விளங்குவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவை உள்ளன.  தலை மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சரிபடுத்தலாம், இல்லாவிடில் அது உறுப்புகளுக்கு பரவி பாதிப்பை பெரிதாகிவிடும்.  நோயாளியின் வயது, புற்றுநோயின் தீவிரம், கட்டி இருக்குமிடம் போன்றவற்றை பொருத்து தான் சிகிச்சையளிக்கப்படும்.  மேலும் கெமோதெரபி, டார்கெட்டட் தெரபி மற்றும் இம்மியூனோ தெரபி போன்றவற்றின் மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | டீ குடிக்கும்போது இதை மட்டும் சாப்பிடவே கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News