ஆந்திர முதல்வரை விட அவரது 3 வயதுப் பேரனின் சொத்துமதிப்பு அதிகமாம்!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 3 வயதுப் பேரனுக்கு 18 கோடியே 71 இலட்ச ரூபாய் சொத்துமதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! 

Last Updated : Nov 22, 2018, 02:38 PM IST
ஆந்திர முதல்வரை விட அவரது  3 வயதுப் பேரனின் சொத்துமதிப்பு அதிகமாம்!  title=

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 3 வயதுப் பேரனுக்கு 18 கோடியே 71 இலட்ச ரூபாய் சொத்துமதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! 

ஆந்திர முதல்வர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8 வருடங்களாக ஆண்டு தோறும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சந்திர பாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது மகனும், ஆந்திர மந்திரியுமான நரா லோகேஷ் விஜயவாடாவில் நிருபர்கள் சந்திப்பில் இதை வெளியிட்டார்.

அதில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கு ரூ.81.83 கோடி சொத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.12.55 கோடி அதிகமாகும், கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடியாக இருந்தது. சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.8.30 கோடியாகும். ஆனால் இதில் கடன் ரூ.5.31 கோடியாகும். இதனால் நிகர சொத்தின் மதிப்பு ரூ.2.99 கோடியாகும். நர லோகேசின் மகனும் சந்திரபாபுவின் பேரனுமான 3வயது தேவன்சின் சொத்துமதிப்பு 18 கோடியே 71 இலட்ச ரூபாயாகும். சந்திரபாபுவின் மனைவியும் ஹெரிட்டேஜ்  புட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான புவனேசுவரியின் சொத்து மதிப்பு 31கோடி ரூபாயாகும்.

 

Trending News