டெக்னாலஜியை யூஸ் பண்ணுங்க... வழக்கறிஞர்களை அறிவுறுத்திய தலைமை நீதிபதி!

இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) ஒரு வழக்கை விசாரிக்கும் போது, ​​தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2023, 03:37 PM IST
டெக்னாலஜியை யூஸ் பண்ணுங்க... வழக்கறிஞர்களை அறிவுறுத்திய தலைமை நீதிபதி! title=

நாட்டின் தலைமை நீதிபதி (CJI) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) பாரம்பரிய தகவல் தொடர்பு முறைகளை மட்டுமே நம்பாமல், தொழில்நுட்பத்திற்கு ஏற்ற அணுகுமுறையை வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஒரு வழக்கை பட்டியலிடுமாறு வழக்கறிஞர் அழுத்தம் கொடுத்த பிறகு,  தலைமை நீதிபதி இதனை வலியுறுத்தினார்,

உண்மையில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிடப்பட்ட பட்டியலில் இல்லாத ஒரு வழக்கை உடனடியாகப் பட்டியலிட வலியுறுத்தினார். இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விஷயத்தை பட்டியலிட பதிவாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்று கூறினார். வழக்கறிஞர்கள் தொழில்நுட்பத்தைப் பின்பற்றத் தயங்குவது ஏன் என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தலைமை நீதிபதி கூறிய விஷயம்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “தொழில்நுட்பத்தை பயன்படுத்த வழக்கறிஞர்கள் ஏன் தயங்குகிறீர்கள்? பதிவாளர் பட்டியலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும், நான் அவற்றைப் பார்த்து பட்டியலிடுவேன். சில சமயங்களில் மதிய உணவைத் தவிர்த்துவிட்டு மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்." தலைமை நீதிபதி சந்திரசூட் நீண்ட காலமாக நீதிமன்ற நடைமுறைகளை நெறிப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

வழக்காடுவோரின் நலனுக்காக நீதிபதிகள் 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் விலகி இருப்பதால், அதற்கான பாதிப்புகளை வழக்குத் தொடுப்பவர்களைச் சுமக்க வைப்பது சரியல்ல என்றும் மே மாதத்தின் தொடக்கத்தில் அவர் வலியுறுத்தினார். அப்போது, ​​உயர் நீதிமன்றங்கள் தொழில்நுட்பம் கொண்ட கலப்பின விசாரணைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார். இத்தகைய வசதிகள் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல, அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.

மேலும் படிக்க | சூரிய புயல்களை கண்டறிவது உள்ளிட்ட வான் ஆராய்ச்சிக்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 தயார்

தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், “நேற்று இரவு தீர்ப்பை திருத்திய பிறகு, தொழில்நுட்பத்தினை பயன்படுத்தாமல் நாம் இருக்கும் போது, அதற்கான பாதிப்புகளை வழக்கினை தொடுத்தவர்கள் சுமக்க முடியாது என்று கூறினேன். இதற்கான பதில் எளிது, உங்களைதொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் மீண்டும் பயிற்சி செய்யுங்கள்." இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி DY சந்திரசூட் பதவியேற்ற பிறகு உச்ச நீதிமன்றப் பதிவேடு முற்றிலும் காகிதமில்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நிலவை அடுத்து சூரியனுக்கு செல்ல திட்டம்..! கெத்து காட்டும் இந்தியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News