1 ஆம் வகுப்பு மாணவன் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு..!

ஹரியானா மாநிலத்தில் 1-ஆம் வகுப்பு மாணவன் சக மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு!!

Last Updated : Sep 2, 2019, 02:25 PM IST
1 ஆம் வகுப்பு மாணவன் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு..! title=

ஹரியானா மாநிலத்தில் 1-ஆம் வகுப்பு மாணவன் சக மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு!!

சிர்சாவில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது  குறித்து மாணவியின் பெற்றோக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் காவல்துறையில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தச் சிறுவனின் பெயர் தனக்குத் தெரியாது என்றும் நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் சிறுமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து முகம் தெரியாத சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு பள்ளிக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஒன்றாம் வகுப்பு மாணவன் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News