பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. மொத்தம் 821650 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 

Last Updated : Mar 6, 2019, 09:34 AM IST

Trending Photos

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..! title=

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. மொத்தம் 821650 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 

2018-19 கல்வியாண்டிற்கான பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் துவங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யைச் சேர்த்த 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், 5,032 தனித்தேர்வா்கள் மற்றும் ஒரு திருநங்கை அடங்குவர். பொதுத்தேர்வுக்காக மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 தேர்வு கடந்த ஆண்டு முதல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 6 பாடங்களுக்கு மொத்தம் 600 மதிப்பெண்கள். தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாள் வாசிப்பு, அடுத்த இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறும். 

தேர்வு நடப்பதை கண்காணிக்க 43,000 ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,000 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Trending News