நாளை சென்னை வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி..!

ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்!

Last Updated : Sep 29, 2019, 11:22 AM IST
நாளை சென்னை வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி..! title=

ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56- வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
 
இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தனராக பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிற்பகல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கு இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் வருகையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Trending News