Air India விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!!

ஏர் இந்தியா விமானத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தார்.

Last Updated : Feb 3, 2019, 03:12 PM IST
Air India விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!! title=

ஏர் இந்தியா விமானத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மும்பை சென்ற  ஏர் இந்தியா விமானத்தில் ரோகித் ராஜ் சிங் என்பவர் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு காலை உணவாக சாம்பாருடன் இட்லி வடை விநியோகிக்கப்பட்டது. அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதை கண்ட அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளார் ஆனால் அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் புகார் ஏற்க மறுத்தால் ரோகித் ராஜ் சிங் உணவில் இருந்த கரப்பான் பூச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார்.

பின்பு அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இத்தைகைய செயலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

Trending News