யார் இந்த நேசமணி? இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்!

இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #Neasamani. யார் இந்த நேசமணி டிவிட்டரில் டிரெண்டானது எப்படி என்று பாப்போம்.

Last Updated : May 30, 2019, 10:13 AM IST
யார் இந்த நேசமணி? இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்! title=

இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #Neasamani. யார் இந்த நேசமணி டிவிட்டரில் டிரெண்டானது எப்படி என்று பாப்போம்.

ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில் சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவு செய்து இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் "இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து மற்றவர்கள் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' , Neasamani எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. 

டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ள நேசமணி வேறுயாரும் இல்லை அவர் 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுவே. 

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த திரைப்படம் ப்ரண்ட்ஸ். கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி.

இந்த சீனை வைத்துதான் நெட்டிசன்கள் தேசிய அளவில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Trending News