கேரளா கெவின் கொலை வழக்கு: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்!

கேரளா கெவின் கவுரவ கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக, நீனுவின் தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்!  

Last Updated : May 30, 2018, 10:55 AM IST
கேரளா கெவின் கொலை வழக்கு: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்!  title=

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். கடந்த இரண்டு வருடங்களாக கெவின் மற்றும் கொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் விவகாரம் கெவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். நீனு கொல்லம் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் துபாயில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கோட்டயம் திரும்பிய கெவின் நீனுவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து அவரது பெற்றொரிடம் அனுமதி கேட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திர்ப்பு தெரிவித்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டு சூரியகவளாவில் உறவினர் அனிஷ் வீட்டில் தங்கியுள்ளனர். 

இதனையடுத்து நீனு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரழைத்த காவலர்கள், நீனுவை அவருடைய பெற்றோர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று நீனுவின் அண்ணன் உள்பட 12 பேர் திடீரென அனிஷ் வீட்டுக்குள் புகுந்து, கெவின், அனிஷ் ஆகியோரை தாக்கி கடத்திச்சென்றனர். இதில் அனிஷ் மட்டும் படுகாயத்துடன் திரும்பி வந்தார். 

இதனையடுத்து நீனு கெவினை அவரது கடத்திச்சென்று விட்டனர் என காந்திநகர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கெவினையும், மற்றும் நீனுவின் அண்ணனையும் தேடி வந்தனர். 

இந்த நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் பிணமாக மிதப்பதாக புனலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வாலிபர் கெவின் கலப்பு திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இந்த கொலை தொடர்பாக, நீனுவின் தந்தை சாக்கோ ஜான் (50), அண்ணன் சயானு சாக்கோ (26) உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை அறிந்த சாக்கோ ஜானும், சயானு சாக்கோவும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றும் மனுவில் கூறி இருந்தனர். 

இந்த மனு, இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், சாக்கோ ஜானும், சயானு சாக்கோவும் நேற்று கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. 

மேலும், இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் அழைப்பின்பேரில், கோட்டயம் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர் என்பது குறிபிடத்தக்கது.

Trending News