SeePic: போட்டிக்கு இடையில் கொட்டாவி விட்ட பாகிஸ்தான் வீரர்...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவரும் நிலையில் போட்டிக்கு இடையில் பாகிஸ்தான் அணி தலைவர் சர்ப்ரஸ் அகமது கொட்டாவி விட்ட விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jun 16, 2019, 10:21 PM IST
SeePic: போட்டிக்கு இடையில் கொட்டாவி விட்ட பாகிஸ்தான் வீரர்... title=

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவரும் நிலையில் போட்டிக்கு இடையில் பாகிஸ்தான் அணி தலைவர் சர்ப்ரஸ் அகமது கொட்டாவி விட்ட விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே 22-வது லீக் ஆட்டம் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 46.4 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. சுமார் அரை மணிநேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இந்த இடைவேளியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது மைதானத்தில் கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது அனிச்சையான இந்தச்  செயலை நெட்டிசன்கள் தற்போது சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். 

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் சர்ப்ரஸ் அகமதுவின் கொட்டாவி சேம்பல்கள்....

Trending News