IPL_2018: சின்ன தலையையும் இழந்த சி.எஸ்.கே அணி!

சி.எஸ்.கே அணியிலிருந்து அடுத்த இரண்டு போட்டியில் ஆப்செண்ட் ஆகும் சுரேஷ் ரெய்னா...! 

Last Updated : Apr 12, 2018, 03:30 PM IST
IPL_2018: சின்ன தலையையும் இழந்த சி.எஸ்.கே அணி!  title=

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் 11-வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிவரும் வேளையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்ததால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.

இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில், ரெய்னா அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடாதது, ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டதால், கேதர் ஜாதவ் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.இதை தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கின் போது, சுரேஷ் ரெய்னா-க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினாலும் நிற்க முடியாமல், ஓடமுடியாமல் அவதிபட்டார்.

இந்நிலையில் உடனே அவுட்டும் ஆனார். அதன் பிறகு அவரை பரிசோதித்த பிசியோதெரபிஸ்ட், ரெய்னா ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதால், அடுத்த இரண்டு போட்டிகளில் ரெய்னா விளையாட மாட்டார் என தெரிவித்தனர். 

வருகின்ற 15-ம் தேதி நடக்க இருக்கும் பஞ்சாபு-க்கு எதிரான போட்டியிலும் 20-ம் தேதி நடக்க இருக்கும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ரெய்னா விளையாட மாட்டார் என சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கேதர் ஜாதவை தொடர்ந்து தற்போது ரெய்னாவும் இரண்டு போட்டிகளில் களமிறங்காத்து சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது...! 

Trending News